ளைதரு பூட்டி வேண்டுகுள கருத்த வாணிற வுருவின் ஒளிறுபு மின்னிப் பரூஉவுறைப் பஃறுளி சிதறிவான் நவின்று பெருவரை நளிர்சிமை அதிர வட்டித்துப் புயலே றுரைஇய வியலிருள் நடுநாள் விறலிழைப் பொலிந்த காண்பின் சாயற் றடைஇத் திரண்டநின் றோள்சேர் பல்லதைப் படாஅ வாகுமெங் கண்ணென நீயும் இருள்மயங் கியாமத் தியவுக்கெட விலங்கி வரிவயங் கிரும்புலி வழங்குநர்ப் பார்க்கும் பெருமலை விடரகம் வரவரி தென்னாய் வரவெளி தாக வெண்ணுதி யதனான் நுண்ணிதிற் கூட்டிய பன்மா ணாரந் தண்ணிது கமழு நின்மார் பொருநாள் அடைய முயங்கே மாயின் யாமும் விறலிழை நெகிழச் சாஅய்தும் அதுவே அன்னை யறியினு மறிக அலர்வாய் அம்பன் மூதூர் கேட்பினுங் கேட்க வண்டிறை கொண்ட வெரிமருள் தோன்றியொடு ஒண்பூ வேங்கை கமழுந் தண்பெருஞ் சாரற் பகல்வந் தீமே.‘‘
(அகம்.218) இஃது இடத்துய்த்துப் பகற்குறி நேர்ந்த வாய்பாட்டான் வரைவுகடாயது. இம் மணிமிடைபவளத்துட், குறிஞ்சிக்கு முதலுங் கருவும் வந்து உரிப்பொருளாற் சிறப்பெய்தி முடிந்தது. ‘‘வண்டுபடத் ததைந்த கண்ணி ஒண்கழல் உருவக் குதிரை மழவர் ஓட்டிய முருகன் நற்போர் நெடுவே ளா
|