ஒருத்தியை நம்மனைத் தந்து வதுவை அயர்ந்தனை யென்ப அஃதியாங் கூறேம் வாழியர் எந்தை செறுநர் களிறுடை அருஞ்சமந் ததைய நூறும் ஒளிறுவாள் தானைக் கொற்றச் செழியன் பிண்ட நெல்லி னள்ளூ ரன்னஎம் ஒண்டொடி நெகிழினும் நெகிழ்க சென்றீ பெருமநின் தகைக்குநர் யாரோ.’’
(அகம். 46) இது
வாயின் மறுத்தது. இக் களிற்றியானைநிரையுள், மருதத்திற்கு முதலுங் கருவும் வந்து உரிப்பொருளாற் சிறப்பெய்தி முடிந்தது. ‘வண்டூது பனிமல’ ரெனவே வைகறையும் வந்தது. ‘‘கானல் மாலைக் கழிப்பூக் கூம்ப நீனிறப் பெருங்கடல் பாடெழுந் தொலிப்ப மீனார் குருகின் மென்பறைத் தொழுதி குவையிரும் புன்னைக் குடம்பை சேர அசைவண் டார்க்கும் அல்குறு காலைத் தாழை தளரத் தூக்கி மாலை அழிதக வந்த கொண்டலொகு கழிபடர்க் காமர் நெஞ்சங் கையறு பினையத் துயரஞ் செய்துநம் அருளா ராயினும் அறாஅ லியரோ அவருடைக் கேண்மை அளியின் மையின் அவணுறைவு முனைஇ வாரற்க தில்ல தோழி கழனி வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்புந் தண்ணுமை வெரீஇய தடந்தாள் நாரை செறிமடை வயிரிற் பிளிற்றிப் பெண்ணை அகமடற் சேக்குந் துறைவன்
|