இது ‘நடுவணது’
(2) ஒழிந்த நான்கானும் அவ் ‘வைய’ த்தைப் பகுக்கின்றது. (இ-ள்)
மாயோன் மேய காடு உறை உலகமும்,சேயோன் மேய மை வரை உலகமும், வேந்தன் மேய தீம் புனல் உலகமும், வருணன் மேய பெரு மணல் உலகமும் - கடல் வண்ணன் காதலித்த
காடுறை யுலகமுஞ், செங்கேழ் முருகன் காதலித்த வான்
தங்கிய வரைசூழுலகமும், இந்திரன் காதலித்த தண்புன னாடுங்,
கருங்கடற் கடவுள் காதலித்த நெடுங்
கோட்டெக்கர் நிலனும்; முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என சொல்லிய முறையான் சொல்லவும் படுமே - முல்லை குறிஞ்சி மருதம் நெய்த லென ஒழுக்கங் கூறிய முறையானே சொல்லவும்படும் எ-று. இந்நான்கு பெயரும் எண்ணும்மையொடு நின்று எழுவாயாகிச் சொல்லவும்படும் என்னும் தொழிற்பயனிலை கொண்டன. என்றது, இவ்வொழுக்க நான்கானும்
அந்நான்கு நிலத்தையும் நிரனிறை வகையாற் பெயர் கூறப்படுமென்றவாறு. எனவே, ஒழுக்கம் நிகழ்தற்கு நிலம் இடமாயிற்று. உம்மை எதிர்மறையாகலின், இம்முறையன்றிச் சொல்லவும் படுமெ
|