நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3301
Zoom In NormalZoom Out


மேற்
கடுவரை நீரிற் கடுத்துவரக் கண்டும்
நெடுவரை நீழ னிரை.’’
            (புற. வெ. வெட்சி.11)

‘‘கல்கெழுசீறூர்க் கடைகாண் விருப்பினான்
மெல்ல நடவா விரையுநிரை - யொல்லெனத்
தெள்ளறற் கான்யாற்றுத் தீநீர் பருகவு
மள்ளர் நடவா வகை.’’

  (பெரும்பொருள்விளக்கம். புறத்திரட்டு.1248.நிரைமீட்சி.6)

இவை கண்டோர் கூற்று.

நுவலுழித்    தோற்றம்  -  பாடிவீட்டுள்ளோர் மகிழ்ந்துரைத்தற்குக்
காரணமான   நிரைகொண்டோர்   வரவும்,   ஊரிலுள்ளோர்   கண்டு
மகிழந்துரைத்தற்குக் காரணமான நிரைமீட்டோர் வரவும்;

உ-ம்:

‘‘மொய்யண லானிரை முன்செல்லப் பின்செல்லு
மையணற் காளை மகிழ்துடி - கையணல்
வைத்த வெயிற்றியர் வாட்க ணிடனாட
வுய்த்தன் றுவகை யொருங்கு.’’
    (புறம். வெ. வெட்சி.12)

‘‘காட்டகஞ் சென்றுயிர் போற்றான் கடுஞ்சுரையா
மீட்ட மகனை வினவுறா - னோட்டந்து
தன்னெதிர் தோன்றும் புனிற்றாத் தழீஇக்கலுழு
மென்னெதிர்ப் பட்டாயோ வென்று.’’

(பெரும்பொருள்விளக்கம். புறத்திரட்டு.1249. நிரைமீட்சி.7)

இது கண்டோர் கூற்று.

தந்து    நிரை - நிரைகொண்டோர் தாங்கொண்ட நிரையைத் தம்
மூர்ப்புறத்துத்    தந்து    நிறுத்தலும்,   நிரைமீட்டோர்தாம்   மீட்ட
நிரையினைத் தந்து நிறுத்தலும்;

உ-ம்:

‘‘குளிறு குரன்முரசங் கொட்டின் வெரூஉங்
களிறொடுதேர் காண்டலு மாற்றா - நளிமணி
நல்லா னினநிரை நம்மூர்ப் புறங்கான
மெல்லாம் பெறுக விடம்.’’

‘‘கழுவொடு பாகர் கலங்காமல் யாத்துத்
தொழுவிடை யாயந் தொகுமி - னெழுவொழித்தாற்
போமே யிவையிவற்றைப் போற்றுமின் புல்லொடுநீர்
தாமேய் புலம்போலத் தந்து.’’

இவை கண்டோர் கூற்று.

பாதீடு - ஈத்தலும் ஈதலும் போலப் பாத்தலும் பாதலும் ஒன்றாதலிற்
பாதீடாயிற்று;     வேந்தனேவலாற்     றாங்கொண்ட    நிரையைப்
பகுத்துக்கோடலும்,  மீட்டோருந்  தத்தநிரையைப்  பகுத்துக்கோடலும்,
நிரையை இழந்தோர்க்குப் பகுத்துக் கொடுத்தலும்;

உ-ம்: