ற்குப்
பராஅயது; பிறவும் வருவனவெல்லாம் இதனான் அடக்குக. இனிப்
பாக்கத்து விரிச்சிக்குக் காரணங்களாவன; பாக்கத்துச் சென்றுழி இருப்புவகுத்தலும், பண்டத்தொடு வல்சி ஏற்றிச் சென்றோரை விடுத்தலும், விரிச்சி வேண்டாவென விலக்கிய வீரக்குறிப்பும், விரிச்சிக்கு வேண்டும் நெல்லும் மலரும் முதலியன தருதலும், பிற நிமித்தப் பகுதிகளும், அவை அறிந்தோர்க்குச் சிறப்புச் செய்தலும் பிறவுமாம். உ-ம்: ‘‘நாளும் புள்ளுங் கேளா வூக்கமொ டெங்கோ னேயின னாதலின் யாமத்துச் செங்கால் வெட்சியுந் திணையுந் தூஉய் மறிக்குரற் குருதி மன்றுதுக ளவிப்ப விரிச்சி யோர்த்தல் வேண்டா வெயிற்புறந் தருதும்யாம் பகைப்புல நிரையே.’’
(தகடூர்யாத்திரை, புறத்திரட்டு.1241,நிரைகோடல்.10) இது விரிச்சி
விலக்கிய வீரக்குறிப்பு; பிறவும்வந்துழிக் காண்க. அரசன்
ஏவலாற்போந்தோரும் விரிச்சி கேட்டார்,இன்ன
ஞான்று வினைவாய்க்குமென்று அறிதற்கு. இனி
வேய்க்குக் காரணங்களாவன; வேய்கூறினார்க்குச்
சிறப்புச் செய்தல் போல்வன. உ-ம்: ‘‘மாற்றருந் துப்பின் வயவேந்த னல்லனே யேற்ற பெருஞ்சிறப் பின்றீதும் - வேற்றூரிற் புல்வேய் குரம்பைப் புறஞ்சிறைவாய் நின்றொற்றி நல்வே யுரைத்தார்க்கு நாம்.’’ என வரும். இனி
ஏனைய ஒன்று பலவாய்த் துறைப்பாற் படுவன
வந்துழிக் காண்க. இங்ஙனம்
புறத்திணைக்குச் சிறுவரவிற்றாதலின்
அன்றே பாடல் சான்ற புலனெறி வழக்க’மென்று (தொல். பொ. அகத்.53) அகத்திற்குக் கூறியது. நிரைமீட்குங்கால் அறிந்தார் அறிந்தவாற்றானே விரைந்து சென்று மீட்பாராதலின் அரசனை உணர்த்தாதே மீட்டல் பெறுதும். இவற்றிற்குந் துறைப்பகுதி கொள்க.
(3) இவையும் வெட்சித்திணை
ஆதல்
|