கூட்டிய
துடிநிலையும்; சிறந்த
கொற்றவை நிலையும் -அத்தொழிற்குச்
சிறந்த கொற்றவைக்குப் பரவுக்கடன் கொடுக்குங்கால் அவளது நிலைமை கூறுதலும்; அத்திணைப்புறனே -
அவ்விருவகை வெட்சிக்கும் புறனடையாம் எ-று. ‘‘நித்திலஞ்செய் பட்டமு நெற்றித் திலதமு மொத்திலங் மெய்பூசி யோர்ந்துடீஇத் - தத்தந் துடியரோ டூர்ப்புறஞ் சூழ்ந்தார் மறவர் குடிநிரை பாராட்டக் கொண்டு.’’ இஃது
இருவகை வட்சிக்கும் பொது, நிரை கொண்டோர்க்கும் மீட்டோர்க்கும் துடிகொட்டிச் சேறலொத்தலின். ‘‘அருமைத் தலைத்தரு மானிரையு ளையை யெருமைப் பலிகோ ளியைந்தா - ளரசனும் வேந்தன்மேற் செல்வான் விறல்வஞ்சி சூடானென் றியாந்தன்மேற் சீறாம லின்று.’’ இதனானே
வருகின்ற வஞ்சித்திணைக்குங்
கொற்றவைநிலை காரணமாயிற்று,
தோற்றோர்க்குக்
கொற்றம் வேண்டியும் வென்றோர்க்கும்
மேற்செல்லுங்காற் கொற்றம் வேண்டியும்
வழிபடு வராதலின். இனிக் கொற்றவைநிலைப் பகுதியுட் சில
வருமாறு:- ‘‘நச்சிலைவேற் காளைக்கு நாளையே கொற்றவை கைச்சிலையு நல்கும்யாங் காணேங்கொல் - மிச்சில்கூர் வாளின்வாய்த் தீண்டாத வார்குருதி மெய்சாய்ப்பத் தாளின்வாய் வீழ்த்தான் றலை.’’ இஃது
உயிர்ப்பலி; இது பொதுவகையான் இருவகை
வெட்சிக்கும் வஞ்சிக்கும் பொது. ‘‘ஆடிப்பண் பாடி யளவின்றிக் கொற்றவை பாடினி பாடற் படுத்துவந்தா - ணாடிய தோளுழலை யாடுவோன் றோளினுந் தூக்கமைத்த தாளுழலை யடுவோன் றாள்.’’ இது
குருதிப்பலி; பொதுவகையான் இருவகை வெட்சிக்கும் வஞ்சிக்கும் பொது. புறத்திணை வழுஏழ் ஆவன
|