இது
முன் இருபெருவேந்தர்க்கும்
போர்செயத் தொடங்குதற் குரியபொதுநிலமை
கூறிய அதிகாரத்தானே புறத்திணைக்
கெல்லாம் பொதுவாகிய வழுவேழும் உணர்த்துத னுதலிற்று; இவை வேத்தியலின் வழீஇத் தன்னுறு தொழிலாய் வருதலின் வழுவாயின. இவை அகத்திற்கும் புறத்திற்கும் உரியவாய் வருவனவும், புறத்திற்
கெல்லாம் பொதுவாய் வருவனவு மாதலிற் பொதுவியலுமாயின. (இ-ள்.)
வெறி அறி
சிறப்பின் - தெய்வத்திற்குச் செய்யுங் கடன்களை அறியுஞ் சிறப்பினையும்; வெவ்வாய் வேலன் - உயிர்க் கொலை கூறலின் வெவ்வாயினையும் உடையனாகிய வேலன்; வெறியாட்டு அயர்ந்த காந்தளும் -
தெய்வமேறி யாடுதலைச் செய்த காந்தளும்; செவ்வேள்வேலைத்
ான் ஏந்தி நிற்றலின் வேலனென்றார். காந்தள் சூடி
ஆடுதலிற் காந்தளென்றார். வேலனைக்
கூறினமையிற் கணிக் காரியையுங் கொள்க. காந்தளையுடைமையானும் பனந்தோடு உடைமையானும் மகளிரை வருத்துதலானும் வேலன் வெறியாட்டயர்ந்த என்றதனானும் வேலன் ஆடுதலே பெரும்பான்மை; ஒழிந்தோர் ஆடுதல் சிறுபான்மை
என்றுணர்க.
|