கால்கொண்மி னாளை வரக்கடவ நாள்’’ இது நட்டுக் கால்கொண்டது. ‘‘இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப் புடைநடு கல்லி னாட்பலி யூட்டி நன்னீ ராட்டி நெய்ந்நறைக் கொளீஇய மங்குன் மாப்புகை மறுகுடன் கமழு மருமுனை யிருக்கைத் தாயினும் வரிமிடற் றரவுறை புற்றத் தற்றே நாளும் புரவலர் புன்க ணோக்கா திரவலர்க் கருகா தீயும் வண்மை யுரைசா னெடுந்தகை யோம்பு மூரே’’
(புறம்.329) இதன்கண்ணும் அது வந்தவாறு காண்க. நீர்ப்படை
- கண்டு கால்கொண்ட கல்லினை நீர்ப்படுத்துத் தூய்மை செய்தலும், பின்னர்ப் பெயரும் பீடும் எழுதி நாட்டியவழி நீராட்டுதலு மென இருவகையாம்; உ-ம்: ‘‘வாளமர் வீழிந்த மறவோன்கல் லீர்த்தொழுக்கிக் கேளி ரடையக் கிளர்ந்தெழுந்து - நீள்விசும்பிற் கார்ப்படுத்த வல்லேறு போலக் கழலோன்க னீர்ப்படுத்தார் கண்ணீரி னின்று.’’ இது நீர்ப்படை. ‘‘பல்லா பெயர்த்து நல்வழிப் படர்ந்தோன் கல்சொரிந் தாட்டிய நீரே தொல்லை வான்வழங்கு நீரினுந் தூய்தே யதனாற் கண்ணீ ரருவியுங் கழீஇத் தெண்ணீ ராடுமின் றீர்த்தமா மதுவே.’’ இது
நாட்டி நீராட்டியது. நடுதல்
- கல்லினை நடுதலும், அக் கல்லின்கண் மறவனை நடுதலுமென இருவகையாம்; உ-ம்: ‘‘சீர்த்த துகளிற்றாய்த் தெய்வச் சிறப்பெய்த நீர்ப்படுத் தற்கு நிலைகுறித்துப் - போர்க்களத்து மன்னட்ட வென்றி மறவோன் பெயர்பொறித்துக் கன்னட்டார் கல்சூழ் கடத்து.’’ இது
கல் நாட்டியது. ‘‘கோள்வாய்த்த சீயம்போற் கொற்றவர்தம் மாவெறிந்து வாள்வாய்த்து வீழ்ந்த மறவேலோய் - நாள்வாய்த் திடைகொள லின்றி யெழுத்துடைக் கல்வாய் மடைகொளல் வேண்டும் மகிழ்ந்து.’’ இது மறவனை
நாட்டியது. சீர்த்தகு
சிறப்பிற் பெரும்படை - அவன் செய்த புகழைத் தகும்படி பொறித்தலும், அக்கல்லைத் தெய்வமாக்கி அதற்குப் பெருஞ் சிறப்புக்களைப் படை
|