நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3327
Zoom In NormalZoom Out


நும் அரசு மோம்புமி
னொளிறேந்து மருப்பினுங் களிறும் போற்றுமின்
எனை நாட் டாங்குநும் போரே யனைநா
ளெறியா ரெறிதல் யாவண தெறிந்தோ
ரெதிர்சென் றெறிதலுஞ் செல்லா னதனா
லறிந்தோர் யாரவன் கண்ணிய பொருளே
பலமென் றிகழ்த லோம்புமி னுதுக்காண்
நிலனளப்பன்ன நில்லாக் குறுநெறி
வண்பரிப் புரவிப் பண்புபா ராட்டி
எல்லிடைப் படர்தந் தோனே கல்லென
வேந்தூர் யானைக் கல்ல
தேந்துவன் போலான்ற னிலங்கிலை வேலே.’’  
(புறம்.301)

இதுவு மது.

வருவிசைப்     புனலைக்  கற்சிறை  போல  ஒருவன்  தாங்கிய
பெருமையானும்    -   தன்படை    நிலையாற்றாது   பெயர்ந்தவழி
விசையொடும்   வரும்  பெருநீரைக்  கல்லணை  தாங்கினாற்போலத்
தன்மேல்வரும் படையினைத் தானே தடுத்த பெருமையும்;

உ-ம்:

‘‘கார்த்தரும் புல்லணற் கண்ணஞ்சாக் காளைதன்
றார்ப்பற்றி யேர்தரு தோணோக்கித் தார்ப்பின்னர்
ஞாட்பினுள் யானைக் கணநோக்கி யாடுப்பின்
றேர்க்குழா நோக்கித்தன் மாநோக்கிக் - கூர்த்த
கணைவரவு நோக்கித்தன் வேனோக்கிப் பின்னைக்
கிணைவனை நோக்கி நகும்’’
             
                (தகடூர்  யாத்திரை.புறத்திரட்டு.1370)

என வரும்.

இது பொன்முடியார் ஆங்கவனைக் கண்டு கூறியது.

‘‘வேந்துடைத் தானை முனைகெட நெரிதர
வேந்துவாள் வலத்த னொருவ னாகித்
தன்னிறந்து வாராமை விலக்கலிற் பெருங்கடற்
காழி யனையன் மாதோ வென்றும்
பாடிச் சென்றோர்க் கன்றியும் வாரிப்
புரவிற் காற்றாச் சீறூர்த்
தொன்மை சுட்டிய வண்மை யோனே’’
        (புறம்.330)

என்பதும் அது.

‘‘வருகதில்வல்லே’’ என்னும் (287) புறப்பாட்டும் அதன் பாற்படும்.
முன்னர்   மாராயம்   பெற்றவனே   பின்னர்   இரண்டு   துறையும்
நிகழ்த்துவான் என்றுணர்க.

பிண்டம்  மேய  பெருஞ்சோற்றுநிலையும் - வேந்தன் போர்தலைக்
கொண்ட பிற்றைஞான்றுதா