நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3342
Zoom In NormalZoom Out


அகத்தோரும் போர் செய்தலும்;

உ-ம்:

‘‘சேணுயர் ஞாயிற் றிணிதோளா னேற்றவு
மேணி தவிரப்பாய்ந் தேறவும் - பாணியாப்
புள்ளிற் பரந்து புகல்வேட்டார் போர்த்தொழிலோர்
கொள்ளற் கரிய குறும்பு’’

இது புறத்தோர் ஏணிமயக்கம்.

‘‘இடையெழுவிற் போர்விலங்கும் யானையோர் போலு
மடையமை யேணி மயக்கிற் - படையமைந்த
ஞாயில் பிணம்பிறக்கித் தூர்த்தார் நகரோர்க்கு
வாயி லெவனாங்கொல் மற்று’’

இஃது அகத்தோர் ஏணிமயக்கம்.

இனி இரண்டும் ஒருங்கு வருதலுங் கொள்க.

உ-ம்:

‘‘பொருவரு மூதூரிற் போர்வேட் டொருவர்க்
கொருவ ருடன்றெழுந்த காலை - யிருவரும்
மண்ணோடு சார்த்தி மதில்சார்த் தியவேணி
விண்ணொடு சார்த்தி விடும்’’

(பெரும்பொருள்விளக்கம்.புறத்திரட்டு 1330.எயில்கோடல்9)

என வரும்.

கடைஇச்     சுற்று அமர் ஒழிய வென்று   கைக்கொண்டு முற்றிய
முதிர்வும்  -  புறத்தோன்  தன்  படையைச்   செலுத்திப்  புறமதிலிற்
செய்யும்   போரின்றாக,   அகத்தோன்   படையை   வென்று  அப்
புறமதிலைக்    கைக்கொண்டு,    உள்மதிலை    வளைத்த   வினை
முதிர்ச்சியும்;     அகத்தோன்     தன்    படையைச்    செலுத்திப்
புறமதிலிற்செய்யும்   போரின்றாகப்,  புறத்தோன்  படையைத்  தள்ளி
வென்று    அப்புறமதிலைக்    கைக்கொண்டு    வளைத்த   வினை
முதிர்ச்சியும்;

உ-ம்:

‘‘கடல்பரந்து மேருச்சூழ் காலம்போற் சென்றோர்
கொடிமதில் காத்தோரைக் கொல்லக் - கடலெதிர்
தோன்றாப் புலிபோ லரண்மறவர் தொக்கடைந்தார்
மான்றேரான் மூதூர் வரைப்பு’’

இது புறத்தோன் முற்றிய முதிர்வு.

‘‘ஊர்சூழ் புரிசையுடன்சூழ் படைமாயக்
கார்சூழ்குன் றன்ன கடைகடந்து - போர்மறவர்
மேகமே போலெயில் சூழ்ந்தார் விலங்கல்போன்
றாகஞ்சேர் தோள்கொட்டி யார்த்து’’

இஃது அகத்தோன் முற்றிய முதிர்வு.

அன்றி  முற்றிய அகத்தோன் வீழ்ந்த நொச்சியும். புற மதிலிலன்றி
உள்மதிற்கட்  புறத்தோனான்  முற்றப்பட்ட  அகத்தோன்  விரும்பின
மதில்காவலும்;  அவன்  காத்தலின்றித் தான் சூழப்பட்ட இடத்திருந்த
புறத்