நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3344
Zoom In NormalZoom Out


டர்ந்த   நீர்ப்பாசி   போன்று   அக்கிடங்கின்கட்போரை  விரும்பின
பாசியும்;

‘பாசிபோல் நீங்காமல் நிற்றலிற் ‘பாசி’ யென்றார்.

உ-ம்:

‘‘பொலங்செய் கருவிப் பொறையுமிப் பண்ணாய்
நிலந்திடர் பட்டதின் றாயிற் - கலங்கமர்மேல்
வேத்தமர் செய்யும் விரகென்னாம் வேன்மறவர்
நீத்துநீர்ப் பாய்புலிபோ னின்று’’

இஃது இருவருக்கும் ஒக்கும்.

வேறு வேறு வருமெனினுங் காண்க.

அதா அன்று ஊர்ச்  செரு வீழ்ந்த மற்றதன் மறனும் - அம் மதிற்
புறத்தன்றி ஊரகத்துப் போரை விரும்பிய அப்பாசி மறனும்;

பாசியென்றார்,  நீரிற் பாசிபோல இருவரும் ஒதுங்கியும்  தூர்ந்தும்
பொருதலின்.

உ-ம்:

‘‘மறநாட்டுந் தங்கணவர் மைந்தறியு மாதர்
பிறநாட்டுப் பெண்டிர்க்கு நொந்தா - ரெறிதொறும்போய்
நீர்ச்செறி பாசிபோ னீங்காது தங்கோமா
னூர்ச்செரு வுற்றாரைக் கண்டு’’

இது புற