யாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர்.’’
(குறள்.550) இது தண்டம். இருமூன்று
மரபின் ஏனோர் பக்கமும் - ஓதலும்
வேட்டலும் ஈதலும் உழவும் நிரையோம்பலும்
வாணிகமுமாகிய அறுவகை இலக்கணத்தையுடைய
வாணிகர் பக்கமும்; வேதம் ஒழிந்தன ஓதலும் ஈதலும்
உழவும் நிரையோம்பலும் வாணிகமும்
வழிபாடுமாகிய அறுவகை இலக்கணத்தையுடைய வேளாளர் பக்கமும்; வாணிகரையும் வேளாளரையும் வேறுகூறாது
இருமூன்று மரபினேனோரெனக் கூடவோதினார்,
வழிபாடும் வேள்வியும் ஒழிந்த தொழில்
இருவர்க்குமொத்தலின். இனி
வேளாளர்க்கு வழிபாடு கொள்ளாது பெண்கோடல்
பற்றி வேட்டல் உளதென்று வேட்டலைக்கூட்டி
ஆறென்பாரு முளர். வழிபாடு இருவகை
வேளாளர்க்கு உரித்து. இனி வேட்டலைக் கூட்டுவார்
அரசராற் சிறப்பெய்தாத வேளாளர்க்கே
வழிபாடு உரித்தென்பர். ‘பக்க’மென்பதனான்
வாணிகர்க்கும் வேளாளர்க்கும் அன்னியராகத் தோன்றினாரையும்
அடக்குக. ஈண்டுப் பக்கத்தாராகிய குலத்தோர்க்குந் தொழில்வரையறை
அவர்நிலைகளான் வேறுவேறுபடுதல்
பற்றி அவர்தொழில் கூறாது இங்ஙனம்
பக்கமென்பதனான் அடக்கினார். இவை ஆண்பால்பற்றி உயர்ச்சிகொண்டன. உ-ம்: ‘‘ஈட்டிய தெல்லாத மிதன்பொருட் டென்பதே காட்டிய கைவண்மை காட்டினார் - வேட்டொறுங் காமருதார்ச் சென்னி கடல்சூழ் புகார்வணிகர் தாமரையுஞ் சங்கும்போற் றந்து’’ (பெரும்பொருள் விளக்கம் புறத்திரட்டு.1161.குடிமரபு11) இது
வாணிகரீகை. ‘‘உற்றுழி யுதவியு முறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்ற னன்றே பிறப்போ ரன்ன வுடன்வயிற் றுள்ளுஞ் சிறப்பின் பாலாற் றாயுமனந் திரியு மொருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் மூத்தோன் வருக வென்னா தவரு ளறிவுடை யோனா றரசுஞ் செல்லும் வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளுங் கீழ்ப்பா லொருவன் கற்பின் மேற்பா லொருவனு மவன்கட் படுமே’’
(புறம்.183) இது வே
|