உயர்ச்சியில்லாத
காமமாவது மறுமைப்பயன்
பெறுங் கடவுள்வாழ்த்துப்
போல் உயர்ச்சியின்றி
இம்மையிற் பெறும்பயனாதலின்,
இழிந்த பொருள்களிற் செல்லும் வேட்கைக் குறிப்பு. ‘புல்லிய வகை’ யாவது, அம்மனக்குறிப்புத் தேவர்கண்ணே பொருந்திய கூறாது தன் பொருட்டானும் பிறன்பொருட்டானும் ஆக்கத்துமேல் ஒருவன்
காமுற்றவழி அவை
அவற்குப் பயன்கொடுத்தலாம். இது ஒன்றனுடைய பகுதியென்க. இத்துணைப் பகுதியென்று இரண்டிறந்தன கூறாது, வாளாதே பகுதி யென்றமையின் தேவரும் மக்களுமென இரண்டே யாயிற்று, அத்தேவருட் பெண்டெய்வங் ‘கொடிநிலை கந்தழி’ (88)
என்புழி அடங்கும். மக்களுட் பெண்பால்
பாடுதல் சிறப்பின்மையிற் ‘‘செயிர்தீர்
கற்பிற் சேயிழை கணவ’’
(புறம்.3) என்றாற்போலச்
சிறுபான்மை ஆண்மக்களொடு
படுத்துப் பாடுப. ‘வகை’யென்றதனான் வாழ்த்தின்கண் மக்கட்பொருளும் உடன்தழுவினும் அவை
கடவுள் வாழ்த்தாமென்று கொள்க. உ-ம்: ‘‘எரியெள்ளு வன்ன நிறத்தன் விரியிணர்க் கொன்றையம் பைந்தா ரகலத்தன் பொன்றா ரெயிலெரி யூட்டிய வில்லன் பயிலிருள் காடமர்ந் தாடிய ஆடல னீடிப் புறம்புதை தாழ்ந்த சடையன் குறங்கறைந்து வெண்மணி யார்க்கும் விழவின னுண்ணூற் சிரந்தை யிரட்டும் விரல னிரண்டுருவாய் ஈரணி பெற்ற வெழிற்றகைய னேரு மிளம்பிறை சேர்ந்த நுதலன் களங்கனி மாறேற்கும் பண்பின் மறுமிடற்றன் றேறிய சூலம் பிடித்த சுடர்ப்படைக் காலக் கடவுட் குயர்கமா வலனே’’
(பதிற்றப்பத்து) இது கடவுள்
வாழ்த்து. தொகைகளிலும்
கீழ்க்கணக்கிலும் உள்ள கடவுள் வாழ்த்தெல்லாம் இதன்கண்
அடக்குக. இனி அறுமுறை
வாழ்த்து வருமாறு: ‘‘நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்‘‘
(குறள்.28) ‘‘கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே யெடுப்பதூஉ மெல்லா மழை’’
(குறள்.15) ‘‘நாகின நந்தி யினம்பொலியும்போத்தென வாய்வா ளுழவர் வளஞ்சிறப்ப ஆயர் அகன்றார் சுரைய க
|