நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3407
Zoom In NormalZoom Out


இது கூறியது கூறலாமென்றுணர்க.                        (30)

மேற்கூறிய ஐந்து சூத்திரங்கட்கும் புறனடை
 

86.வழக்கொடு சிவணிய வகைமை யான.
 

இது  ‘அமரர்கண்  முடியும்’  (தொல். புறம்.26) என்னுஞ்  சூத்திர
முதலியவற்றுக்கெல்லாம் புறனடை.

(இ-ள்.) கடவுள் வாழ்த்தும் அறுமுறை வாழ்த்தும் முதலாக ஊரொடு
தோற்ற     மீறாகக்     கிடந்தனவெல்லாஞ்    சான்றோர்    செய்த
புலனெறிவழக்கோடே       பொருந்திவந்த      பகுதிக்கண்ணேயான
பொருள்களாம் எ-று.

எனவே, புலனெறிவழக்கின் வேறுபடச் செய்யற்க என்பது கருத்து.

கடவுள்  வாழ்த்துப்  பாடுங்கான்  முன்னுள்ளோர்  பாடியவாறன்றி
முப்பத்துமூவருட் சிலரை விதந்து வாங்கிப் பாடப்பெறாது.

இனி     அறுமுறைவாழ்த்துப்     பாடுங்கால்    முன்னுள்ளோர்
கூறியவாறன்றி ஆவிற்கினமாகிய எருமை முதலியனவும் வாழ்த்தப்படா.

இனிப்   புரைதீர்  காமம்   புல்லிய  வகையும்  ஒருவன்றொழுங்
குலதெய்வத்தை நோக்கியன்றி வரைவின்றிக் கூறப்படாது.

இனிச்  செந்துறைப்பாடாண்பாட்டு  முன்னுள்ளோர்  கூறியவாறன்றி
இறப்ப இழித்தும் இறப்ப உயர்த்தும் கூறப்படாது.

இனிக் காமப்பகுதிக் கடவுளரைக் கூறுங்காலும் பெண்டெய்வத்தோடு
இயல்புடையாரைக்  கூறினன்றி  எண்வகை  வசுக்கள் போல்வாரையும்
புத்தர், சமணர் முதலியோரையுங் கூறப்படாது.

இனி     மக்களும் ஒருவனைத் தெய்வப்பெண்பால்  காதலித்தமை
கூறுங்காலும்  மக்கட்பெண்பாற்குக்  காதல்  கூறுங்காலும்  முன்னோர்
கூறியவாறன்றிக் கூறப்படாது.

இனிக் குழவிப்பருவத்துக் காமங்  கூறுங்காலும்  முன்னர்க் காப்பும்
பின்னர் ஏனையவுமாக முன்னுள்ளோர் கூறியவாறன்றிக் கூறப்படாது.

இனி  ஊரொடு தோற்றமும்  பரத்தையர்க்கன்றிக்  குலமகளிர்க்குக்
கூறப்படாது.

இன்னுஞ்   ‘சிவணிய வகைமை’ என்றதனானே முற்கூறியவற்றோடே
நாடும் ஊரும் மலையும் யாறும் படையுங் கொடியுங் குடையும்  முரசும்
நடைநவில்    புரவியுங்    களிறுந்    தேருந்    தாரும்    பிறவும்
வருவனவெல்லாங் கொள்க.

உ-ம்:

‘‘முற்பற்றி னாரை முறைசெய்யிற் றானென்னைக்
கைப்பற்றக் கண்டேன் கனவினு - ளிப்பெற்றித்
தன்னைத் தனக்கே முறைப்