நின் வாள்வா யொழித்ததை யதூஉஞ் சாலுநற் றமிழ்முழு தறிதல் அதனொடு மமையா தணுக வந்துநின் மதனுடை முழவுத்தோ ளோச்சித் தண்ணென வீசி யோயே வியலிடங் கமழ இவணிசை யுடையோர்க் கல்ல தவண துயர்நிலை யுலகத் துறையு ளின்மை விளங்கக் கேட்ட மாறுகொல் வலம்படு குரிசினீ யீங்கிது செயலே’’
(புறம்.50) இவை போல்வன வெல்லாம் இயன்மொழி. ‘‘மலையுறழ் யானை வான்றோய் வெல்கொடி வரைமிசை யருவியின் வயின்வயி னுடங்கக் கடல்போ றானைக் கடுங்குரல் முரசங் காலுறு கடலிற் கடிய வுரற வெறிந்து சிதைந்தவாள் இலைதெரிந்த வேல் பாயந்தாய்ந்த மா வாயந்துதெரிந்த புகன்மறவரொடு படுபிணம் பிறங்க நூறிப் பகைவர் கெடுகுடி பயிற்றிய கொற்ற வேந்தே நின்போ, லசைவில் கொள்கைய ராகலி னசையாது ஆண்டோர் மன்றவிம் மண்கெழு ஞாலம் நிலம்பயம் பொழியச் சுடர்சினந் தணியப் பயங்கெழு வெள்ளி யாநிய நிற்ப விசும்புமெய் யகலப் பெயல்புர வெதிர நால்வேறு நனந்தலை யோராங்கு நந்த விலங்கு கதிர்த்திகிரி முந்திசி னோரே’’
(பதிற்றுப்.69) இது
முன்னுள்ளோர்க்கும் இயல்பென்பதுபடக் கூறிய
இயன்மொழி வாழ்த்து. ‘‘முரசுகடிப் பிகுப்பவும் வால்வளை துவைப்பவு மரசுடன் பொருத வண்ண னெடுவரைக் கறங்குவெள் ளருவி கல்லலைத் தொழுகும் பறம்பிற் கோமான் பாரியும் பிறங்குமிசைக் கொல்லி யாண்ட வல்வில் லோரியுங் காரி யூர்ந்து பேரமர்க் கடந்த மாரி யீகை மறப்போர் மலையனும் ஊரா தேந்திய குதிரைக் கூர்வேற் கூவிளங் கண்ணிக் கொடும்பூ ணெழினியும் ஈர்ந்தண் சிலம்பி னிருடூங்கு நளிமுழை யருந்திறற் கடவுள் காக்க முயர்சிமைப் பெருங்க னாடன் பேகனுந் திருந்துமொழி மோசி பாடிய ஆயு மார்வமுற் றுள்ளி வருந ருலைவுநனி தீரத் தள்ளா தீயுந் தகைசால் வண்மைக் கொள்ளா ரோட்டிய நள்ளியு மெனவாங்கு எழுவர் மாய்ந்த பின்றை யழிவரப் பாடி வருநரும் பிறருங் கூடி யிரந்தோ ரற்றந் தீர்க்கென விரைந்திவண் உள்ளி வந்தனென் யானே விசும்புறக்
|