ங்குபுகழ்ப் பேகன் ஒல்லென வொலிக்குந் தேரொடு முல்லை வேலி நல்லூ ரானே’’
(புறம். 144) இது
கண்ணகி காரணமாக வையாவிக்கோப் பெரும் பேகனைப் பரணர் பாடிய கைக்கிளை வகைப் பாடாண்பாட்டு. ‘கிளையை
மன்னெங் கேள்வெய் யோற்கென’ வினவ, ‘யாங்கிளையல்லேம் முல்லை வேலி நல்லூர்க்கண்ணே வருமென்று சொல்வாரெனக் கூறுதலின், அ ஃது ஏனைக் கைக்கிளைகளின் வேறாயிற்று. ‘கன்முழை யருவி’ என்னும் (147) புறப்பாட்டும் அது. தொக்க
நான்கும் உள என மொழிப - அந்நான்கும் முற்கூறிய ஆறனோடே தொக்குப் பத்தாய்ப் பாடாண்பகுதிக்கண்ணே உளவாய் வருமென்று கூறுவர் ஆசிரியர் எ-று. ‘தொக்க நான்’ கென்றதனான்
இந்நான்கும் வெண்பாவும் ஆசிரியமுந் தொக்குநின்ற மருட்பாவானும் வருமென்பதூஉங்
கொள்க. இவற்றை மேல் வருகின்றவற்றோடு உடன்கூறாராயினார்,
அவை இழிந்தோர் கூறுங் கூற்றாகலின்.
(35) இதுவுமது |