ன்னுமே யேம முரசின் குரல்’’ இதனுள்
இழிகுலத்தோன் பறைசாற்றினமை கூறுதலின்
இழிந்தோர் கூறுதல் ஒழிந்த மங்கலங்கட்கும்
ஒக்கும். பெருமங்கல
மென்றதனானே பக்கநாளுந் திங்கடோறும் வரும் பிறந்த நாளும் பாடலுட்
பயிலாமை யுணர்க. சிறந்த
சீர்த்தி மண்ணுமங்கலமும் - அரசர்க்குச்
சிறப்பெய்திய மிக்க புகழை எய்துவிக்கும் முடிபுனைந்து ஆடும் நீராட்டு
மங்கலமும்;
இதனைப் பிறந்தநாளின் பின்வைத்தார், பொன்முடி
புனைந்த ஞான்று தொடங்கி யாண்டுதோறும் இது வருமென்றற்கு. குறுநில மன்னர்க்காயின் அவர்க்குரிய பட்டத்தொடு கூடிய மண்ணு மங்கலமும் கொள்க. உ-ம்: ‘‘அளிமுடியாக் கண்குடையா னாகுதிநாள் வேய்ந்த வொளிமுடி பொன்மலையே யொக்கு - மொளிமுடிமேன் மந்திரத்தா லந்தணர் வாக்கியநீ ரம்மலைமே லந்தரத்துக் கங்கை யனைத்து’’ என வரும். இதனானே
யாண்டு இத்துணைச் சென்றதென்று
எழுதும் நாண்மங்கலமும் பெறுதும். நடைமிகுத்து
ஏத்திய குடைநிழன் மரபும் - உலக வொழுக்கத்தை இறப்ப
உயர்த்துப் புகழ்ந்து கூறப்பட்ட குடைநிழல திலக்கணமும்; இங்ஙனம்
புனைந்துரைத்தற்கு ஏதுவாயது நிழலாம்; என்னை? அந்நிழல் உலகுடனிழற்றியதாகக்
கூறுதலும்பட்டுக்
குடி புறங்காத்தற்குக் குறியாகக் ‘குடைகொண்டே’ னென்று அக் கொற்றவன் குறிக்கவும்
படுதலின். மரபென்றதனாற்
செங்கோலுந்
திகிரியும் போல்வனவற்றைப் புனைந்துரையாக்கலுங் கொள்க. உ-ம்: ‘‘மந்தரங் காம்பா மணிவிசும் போலையாத் திங்க ளதற்கோர் திலதமாம் - எங்கணும் முற்றுநீர் வைய முழுதும் நிழற்றுமே கொற்றப் போர்க் கிள்ளி குடை’’
(முத்தொள்.35) என வரும். ‘‘அறநீர்மை தாங்கி யளப்பரிதாய் வானப் புறநீர்போன் முற்றும் பொதியும் -
பிறரொவ்வா மூவேந்த ருள்ளு முதல்வேந்தன் முத்தமிழ்க்குக் கோவேந்தன்
கண்டான் குடை’’ எனவும், ‘‘ஞாயிறு
சுமந்த கோடுதிரள் கொண்மூ மாக விசும்பி னடுவுநின் றா அங்குக் கண்பொர விளங்குநின் விண்பொரு வியன்குடை வெயின்மறைக் கொண்டன்றோ அன்றே வருந்திய குடிமறைப் பதுவே கூர்வேல் வளவ’’
(புறம்.35) எனவும், ‘‘திங்களைப் போற்றுதுந் தி
|