டிய
இன்பத்தின் பகுதியாகிய புணர்தல் முதலிய
ஐவகை ஒழுக்கத்தினுள்; காமக் கூட்டங் காணுங்காலை -
புணர்தலும், புணர்தனிமித்தமு மெனப்பட்ட காமப்புணர்ச்சியை
ஆராயுங் காலத்து; மறைஓர் தேஎத்து மன்றல் எட்டனுள்-வேதம்
ஓரிடத்துக் கூறிய மண மட்டனுள்; துறை அமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பு -
துறை அமைந்த நல் யாழினையுடைய பிரிவின்மையோரது தன்மை என்றவாறு. அன்பாவது, “அடுமரந் துஞ்சுதோள் ஆடவரும் ஆய்ந்த படுமணிப் பைம்பூ ணவருந் -
தடுமாறிக் கண்ணெதிர்நோக் கொத்தவண்
காரிகையிற் கைகலந்து உண்ணெகிழச் சேர்வதா
மன்பு.” மன்றல் எட்டாவன: பிரமம்,
பிராசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், ஆசுரம்,
இராக்கதம், பைசாசம் என்பன. அவற்றுட்
பிரமமாவது: ஒத்த கோத்திரத்தானாய்
நாற்பத் தெட்டி யாண்டு பிரமசரியங் காத்தவனுக்குப்
பன்னீராட்டைப் பருவத்தாளாய்ப் பூப்பு
எய்தியவளைப் பெயர்த்து
இரண்டாம் பூப்பு எய்தாமை அணிகலன்
அணிந்து தானமாகக் கொடுப்பது. “கயலே ரமருண்கண் கன்னிபூப் பெய்தி அயல்பே ரணிகலன்கள் சேர்த்தி - இயலின் நிரலொத்த அந்தணற்கு நீரிற் கொடுத்தல் பிரமமண மென்னும் பெயர்த்து.” பிராசாபத்தியமாவது:
மகட்கோடற்கு உரிய கோத்திரத்தார் கொடுத்த பரிசத்து இரட்டி தம்மகட்கு ஈந்து கொடுப்பது. “அரிமத ருண்கண் ஆயிழை யெய்துதற்கு உரியவன் கொடுத்த வொண்பொரு ளிரட்டி திருவின் தந்தை திண்ணிதிற் சேர்த்தி அரியதன் கிளையோ டமைவரக் கொடுத்தல் பிரித லில்லாப் பிராசா பத்தியம்.” ஆரிடமாவது:
தக்கான் ஒருவற்கு ஆவும் ஆனேறும் பொற் கோட்டுப் பொற்குளம்பினவாகச் செய்து அவற்றிடை
நிறீஇப் பொன் அணிந்து நீரும் இவைபோற் பொலிந்து வாழ்வீரென நீரிற்கொடுப்பது. “தனக்கொத்த வொண்பொருள் தன்மகளைச் சேர்த்தி மனைக்கொத்த மாண்புடையாற் பேணி - இனக்கொத்த ஈரிடத் தாவை நிறீஇயிடை ஈவதே ஆரிடத்தார் கண்டமண மாம்.” தெய்வமாவது: பெருவேள்வி வேட்பிக்கின்றார்
|