நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3444
Zoom In NormalZoom Out


ணர்ச்சி   வேட்கை நிகழ்ந்துழித் தலைவியைக் கூடற்குக் கருதி உரை
நிகழ்த்துங்காற் கூற்று மொழியான் அன்றிக் கண்ணான் உரை நிகழ்த்து
மென்பதூஉம்   அது   கண்டு  தலைவியும்  அக்கண்ணானே  தனது
வேட்கை  புலப்படுத்திக்  கூறுமென்பதூஉங் கூறுகின்றது; எனவே இது
புணர்ச்சி நிமித்தமாகிய வழிநிலைக்காட்சி கூறுகின்றதாயிற்று.

(இ-ள்.)     அறிவு - தலைவன் அங்ஙனம்  மக்களுள்ளாளென்று
அறிந்த  அறிவானே;  உடம்படுத்தற்கு  - தலைவியைக் கூட்டத்திற்கு
உடம்படுத்தற்கு;  நாட்டம் இரண்டும் கூட்டி உரைக்கும் - தன்னுடைய
நோக்கம்   இரண்டானுங்  கூட்டி  வார்த்தை  சொல்லும்;  குறிப்புரை
நாட்டம்  இரண்டும்  ஆகும்  -  அவ்வேட்கை கண்டு தலைவி தனது
வேட்கை   புலப்படுத்திக்   கூறுங்   கூற்றுந்  தன்னுடைய  நோக்கம்
இரண்டானுமாம் எ-று.

‘நாட்டம்     இரண்டும்’ இரண்டிடத்துங் கூட்டுக. உம்மை விரிக்க.
இங்ஙனம்   இதற்குப்   பொருள்கூறல்   ஆசிரியர்க்குக்  கருத்தாதல்
‘புகுமுகம்   புரிதல்’  (தொல்.பொ.261)   என்னும்  மெய்ப்பாட்டியற்
சூத்திரத்தானுணர்க; அதற்குப் பேராசிரியர் கூறிய உரையானுமுணர்க.
ஒன்று  ஒன்றை  ஊன்றி  நோக்குதலின் நாட்டமென்றார். நாட்டுதலும்
நாட்டமும் ஒக்கும்.

உ-ம்:

“நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து”   
       (குறள்.1082)

என வரும்.

இது புகுமுகம் புரிதல்  என்னும் மெய்ப்பாடு கூறியது.         (5)

புணர்ச்சியமைதி இவற்றான்நிகழுமெனல்
 

97.  குறிப்பே குறித்தது கொள்ளு மாயின்
ஆங்கவை நிகழும் என்மனார் புலவர்.
இது புணர்ச்சியமைதி கூறுகின்றது.
  

(இ-ள்.)  குறித்தது - தலைவன் குறித்த புணர்ச்சி வேட்கை யையே;
குறிப்புக்   கொள்ளுமாயின்   -   தலைவி   கருத்துத்  திரிவுபடாமற்
கொள்ளவற்  றாயின்;  ஆங்கு  -  அக்  குறிப்பைக் கொண்டகாலத்து;
அவை  நிகழு  என்  மனார்  புலவர்  -  புகுமுகம் புரிதன் முதலாக
இருகையுமெடுத்தல்   ஈறாகக்  கிடந்த  மெய்ப்பாடு  பன்னிரண்டனுட்
(261-263)  பொறிநுதல்  வியர்த்தல்  முதலிய பதினொன்றும் முறையே
நிகழுமென்று கூறுவர் புலவர் எ-று.

‘அங்கவை’யும்     பாடம்.   பன்னிரண்டாம்     மெய்ப்பாடாகிய
இருகையுமெடுத்தல்   கூறவே  முயக்கமும்  உய்த்துணரக்  கூறியவாறு
காண்க. அம் மெ