நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3467
Zoom In NormalZoom Out


வருவனவுங் கொள்க.

“தளிர்சேர் தண்டழை தைஇ நுந்தை
குளிர்வாய் வியன்புனத் தெற்பட வருகோ
குறுஞ்சுனைக் குவளை யடைச்சிநாம் புணரிய
நறுந்தண் சாரல் ஆடுகம் வருகோ
இன்சொன் மேவலைப் பட்டவெ னெஞ்சுணக்
கூறினி மடந்தைநின் கூரெயி றுண்கென
யான்றன் மொழிதலின் மொழியெதிர் வந்து
தான்செய் குறிநிலை யினிய கூறி
ஏறுபிரி மடப்பிணை கடுப்ப வேறுபட்
டுறுகழை நிவப்பிற் சிறுகுடிப்பெயரும்
கொடிச்சி செல்புறம் நோக்கி
விடுத்த நெஞ்சம் விடலொல் லாதே.”        
(நற்.204)

“இரண்டறி கள்விநங் காத லோளே
முரண்கொ டுப்பிற் செவ்வேன் மலையன்
முள்ளூர்க் கானம் நண்ணுற வந்து
நள்ளென் கங்கு னம்மோ ரன்னள்
கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்துச்
சாந்துளர் நறுங்கதுப் பெண்ணெய் நீவி
யமரா முகத்த ளாகித்
தமரோ ரன்னள் வைகறை யானே.”         
(குறுந்.312)

என வரும்.

அறிந்தோள் அயர்ப்பின் அவ்வழி மருங்கிற் கேடும் பீடுங் கூறலும்
-  மதியுடம்பட்ட  தோழி நீர் கூறிய குறையை யான் மறந்தே னெனக்
கூறுமாயின், அவ்விடத்துத் தன்னொடு கூடாமையான் தலைவிமருங்கிற்
பிறந்த  கேட்டையும், அவள் அதனை ஆற்றியிருந்த பெருமையையும்
கூறுதலும்:

“ஒள்ளிழை மகளிரோ டோரையும் ஆடாய்
வள்ளிதழ் நெய்தல் தொடலையும் புனையாய்
விரிபூங் கானல் ஒருசிறை நின்றோய்
யாரை யோநிற் றொழுதனம் வினவுதும்
கண்டோர் தண்டா நலத்தை தெண்டிரைப்
பெருங்கடற் பரப்பின் அமர்ந்துறை யணங்கோ
விருங்கழி மருங்கு நிலைபெற் றனையோ
சொல்லினி மடந்தை யென்றனென் அதனெதிர்
முள்ளையிற்று முறுவலுந் திறந்தன
பல்லிதழ் உண்கணும் பரந்தவாற் பனியே”
      (நற்.155)

“தண்டழை செரீஇயும் தண்ணென வுயிர்த்தும்
கண்கலுழ் முத்தம் கதிர்முலை யுறைத்தும்
ஆற்றின ளென்பது கேட்டனம் ஆற்றா
வென்னினு மவளினு மிகந்த
வின்னா மாக்கட்டிந் நன்ன ரூரே.”

“தோளும் கூந்தலும் பலபா ராட்டி
வாழ்தல் ஒல்லுமோ மற்றே செங்கோல்
குட்டுவன் தொண்டி யன்ன
வெற்கண்டு நயந்துநீ நல்காக் காலே.”     
(ஐங்குறு.178)

எனவரும். அயர்த்தது அவள் அருமை தோன்றுதற்கு.

தோழி நீக்கலி னாகிய நிலைமையும் நோக்கி - தோழி இவ்விடத்துக்
காவலர்  கடியரெனக்  கூறிச் சேட்பட நிறுத்தலிற் றனக்கு உண்டாகிய
வருத்தத்தையும் பார்த்து:

உம்மை, சிறப்பு. இதுவே மடன்மா கூறுதற்கு ஏதுவாயிற்று.

“நல்லுரை யிகந்து புல்லுரைத் தாஅய்ப்
பெயனீர்க் கேற்ற பசுங்கலம் போல
வுள்ளந் தாங்கா