இதனுள் தலைவிகூற்று நிகழ்த்துமாறு கூறுகின்றான். சில கூற்றுக்களுள் தன்வயின் உரிமையும் அவன்வயிற் பரத்தையும் பட நிகழ்த்தவும் பெறுமென்கின்றான். ‘அவன்வயின்’ எனவே ‘தன்’னென்றது தலைவியையாம்; உரிமை - களவிலே கற்புக்கடம் பூண்டொழுகல்; எனவே, புலவியுள்ளத்தாளாகவும் பெறுங் களவினென்பது கருதிப் பரத்தையுமுள என்றான்; ஊடலும் உணர்த்தலும் வெளிப்பட நிகழாமையின் இவை புலவிப் போலி. பரத்தை - அயன்மை. அவன்கட் பரத்தை மையின்றேனும் காதன்மிகுதியான் அங்ஙனங் கருதுதல் பெண்தன்மை, உம்மை எதிர்மறையாகலின் இவ்விரண்டும் இலவாதலே பெரும்பான்மை.
(இ-ள்.) மறைந்து அவற் காண்டல் - தலைவன் புணர்ந்து நீங்குங்கால் தன் காதன்மிகுதியான் அவன் மறையுந்துணையும் நோக்கி நின்று அங்ஙனம் மறைந்தவனைக் காண்டற்கண்ணுந் தோழிக்குக் கூற்றாற் கூறுதலுள: உ-ம்:
“கழிப்பூக் குற்றும் கானல் அல்கியும் வண்டற்
|