குறவர் அறியா தறுத்த சிறியிலைச் சாந்தம் வறனுற்
றார முருக்கிப் பையென மரம்வறி தாகச் சோர்ந்துக் காங்கென் அறிவு முள்ளமு மவர்வயிற்
சென்றென வறிதா லிகுளையென் யாக்கை யினியவர் வரினு நோய்மருந் தல்லர் வாரா தவண
ராகுக காதல ரிவணங் காமம் படரட வருந்திய நோய்மலி வருத்த காணன்மா ரெமரே”
(நற்.64)
“உள்ளி னுள்ளம் வேமே யுள்ளா திருப்பினெம்மளவைத் தன்றே வருத்தின் வான்றோய் வற்றே காமம் சான்றோ ரல்லர்யா மரீஇ யோரே” (குறுந்.102)
என வரும்.
“நீயுடம் படுதலின் யான்றர வந்து குறிநின் றனனே குன்ற நாடன் இன்றை யளவை சென்றைக் கென்றி கையுங் காலு மோய்வன வொழுங்கி தீயுறு தளிரி னடுங்கி யாவது மில்லையான் செயற்குரி யதுவே.” (குறுந்.388)
இதுத் தோழி கூற்றே; ‘சென்றைக்க’ வென்றதனான் தலைவி மறுத்தமை பெற்றாம்.
மறுத்து எதிர்கோடல் - அங்ஙனம் வழிபாடு மறுத்த தலைவியே அவனை ஏற்றுக்கோடலை விரும்பியக்கண்ணும்: அது,
“கௌவை யஞ்சிற் காம மெய்க்கும் எள்ளற விடினே யுள்ளது நாணே பெருங்களிறு வாங்க முறிந்துநிலம் படாஅ நாளுடைய யொசிய லற்றே கண்டிசிற் றோழியவ ருண்டவென் னலனே.” (குறுந்.112)
இது ‘நாணேயுள்ளது கற்புப்போம்’ என்றலின் மறுத்தெதிர் கோடலாம்.
பழி தீர்முறுவல் சிறிதே தோற்றல் - தன் கற்பிற்கு வரும் பழி தீர்ந்த தன்மையான் தன்கண் தோன்றிய மகிழ்ச்சியைச் சிறிதே தோழிக்குத் தோற்றுவித்தற்கண்ணும்:
தலைவனான் தோன்றிய நோயும் பசலையும் முருகனான் தீர்ந்த தென்று அவன் கேட்பிற் கற்பிற்குப் பழியாமாதலிற் ‘பழி’ யென்றார். உ-ம்:
“அணங்குடை நெடுவரை யுச்சியின் இழிதருங் கணங்கொள் அருவிக் கான்கெழு நாடன் மணங்கமழ் வியன்மார் பணங்கிய செல்லல் இதுவென வறியா மறுவரற் பொழுதின் படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை நெடுவேட் பேணத் தணிகுவள் இவளென முதுவாய்ப் பெண்டி ரதுவாய் கூறக் களனன் கிழைத்துக் கண்ணி சூட்டி வளநகர் சிலம்பப் பாடிப் பலிகொடுத் துருவச் செந்தினை குருதியொடு தூஉய் முருகாற்றுப் படுத்த வுருகெழு நடுநாள் ஆரம் நார வருவிடர்த் ததைந்த சாரற் பல்பூ வண்டுபடச் சூடிக் களிற்றிரை தெரீஇய பார்வ லொதுக்கின் ஒளித்தியங்கு மரபின் வயப்புலி போல நன்மனை நெடுநகர்க் காவல ரறியாமைத் தன்னசை யுள்ளத்து நன்னசை வாய்ப்ப இன்னுயிர் குழைய முயங்குதொறும் மெய்ம்மலிந்
|