து நக்கனென் அல்லனோ யானே எய்த்த நோய்தணி காதலர் வரஈண்டு ஏதில் வேலற் குலந்தமை கண்டே.” (அகம்.22)
இதனுட் பழிதீர அவன் வந்து உயிர்தளிர்ப்ப முயங்கி நக்க நிலையைத் தோழிக்குத் தலைவி கூறியவாறு காண்க:
கைபட்டுக் கலங்கினும் - தலைவி குறிப்பின்றி எதிர்ப்பட்ட தலைவன் ஒருவழி அவளை அகப்படுத்தவழிக் காட்சி விருப்பினளாயினும் அப்பொழுது அவள் கலங்கினும்:
எனவே, காட்சி விருப்பினை மீதூர்ந்து கலக்கம் புலப்பட்டது தலைவன்வயிற் பரத்தைமை கருதி.
“கெடியவுங் கோட்டவு நீரின்றி நிறம்பெறப் பொடியழற் புறந்தந்த பூவாப்பூம் பொலங்கோதைத் தொடி செறி யாப்பமை”
(கலி.54) என்னுங் குறிஞ்சிக்கலியுள் “
அதனா லல்லல் களைந்தனென் றோழி” எனக் கைப்பட்டுக் கலங்கிய வருத்தத்தைக் ‘களைந்தனெ’ னெனத் தலைவியுரையெனத் தோழிக்கு உரைத்தற்கட் கூறியவாறு காண்க. இவ்வுதாரணம் ஆண்டுக் காட்டுதும்.
“உறுகழி மருங்கி னோதமொடு மலர்ந்த” (அகம்.230)
என்னும் பாட்டுத் தலைவன் இதனைக் கூறியது.
நணு மிக வரினும் - தலைவனை எதிர்ப்பட்ட தலைவி தன் பெருநாணுடைமை கூறித் தலைவனை ஏற்றுக்கொள்ளாது நிற்பினும்: உ-ம்:
“விளையா டாயமொடு வெண்மண லழுவத்து மறந்தனந் துறந்த காழ்முளை யகைய நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்த்து நும்மினுஞ் சிறந்தது நுவ்வை யாகுமென் றன்னை கூறினள் புன்னையது சிறப்பே அம்ம நாணுதும் நும்மொடு நகையே விருந்திற் பாணர் விளரிசை கடுப்ப வலம்புரி வான்கோடு நரலு மிலங்குநீர்த் துறைகெழு கொண்கநீ நல்கின் இறைபடு நீழல் பிறவுமா ருளவே.” (நற்.172)
இதனுள் ‘அம்ம நாணுதும்’ எனப் புதிதுவந்ததொரு நாணுமிகுதி தோன்ற மறுத்துரைத்தலின், தன்வயினுரிமையும் அவன்வயிற் பரத்தை மையுங் கூறினாள்.
இட்டுப் பிரிவு இரங்கினும் - சேணிடையின்றி இட்டிதாகப் பிரிந்துழித் தலைவி இரங்கினும்:
கற்பினுட் சொல்லாது பிரிதலையும்
இட்டுப் பிரிவென்ப, களவு போல நிகழ்பொருள் உணர்த்திப் பிரிதலருமையின். உ-ம்:
“யானை யீண்டை யேனேயென் னலனே ஆனா நோயொடு கான லஃதே துறைவன்றம்மூ ரானே மறையல ராகி மன்றத் தஃதே.” (குறுந்.97)
|