க. அலராமற்
குவிந்த கொத்தையுடைய புன்னைக்
கண்ணே புலானாற்றத்தையுடைய நீர் தெறித்தரும்பிய சேர்ப்பனென்றதனான், புன்னையிடத்துத் தோன்றிய புலானாற்த்தைப் பூவிரிந்து கெடுக்குமாறுபோல, வரைந்து கொண்டு களவின்கண் வந்த குற்றம் வழிகெட
ஒழுகுவனென்பது உள்ளுறை. “இரண்டறி கள்வி” (குறுந்.312) என்னும் பாட்டினுள்
தோற்றப் பொலிவை மறைப்பளெனத் தலைவன் கூறியவாறும் உணர்க. மறைந்தவற் காண்டன் முதலிய ஆறற்கும் உம்மையும் உருபும் விரித்து, ஏனையவற்றிற்கு உம்மை விரிக்க; உம்மை விரிக்கவேண்டுவனவற்றிற்கு உம்மையும், இரண்டும் விரிக்க வேண்டுவனவற்றிற்கு இரண்டும் விரித்து, அவற்றிற்கும் ஏனை வினையெச்சங்கட்கும் கூற்று நிகழ்தலுளவென முடிக்க. கூற்று அதிகாரத்தான் வரும். உயிராக்காலத்து உயிர்த்தலு முளவென முடிக்க. ஓரிடத்தான தன்வயின்
உரிமையும் அவன்வயிற் பரத்தையும் உள-இக்கூற்று முப்பத்தாறனுள் ஒரோவிடங்களிலே தன்னிடத்து அன்பிற்கு உரிமையுண்டாகவும் அவனிடத்து அயன்மை உண்டாகவுங் கூற்று நிகழ்தலுள: ஆன் ஆனவென ஈறு திரிந்தது அன்னவும் உள - அவைபோல்வன பிறவும் உள என்றவாறு. ‘அன்னபிற’
வென்றதனான் இன்னுந் தலவிகூற்றாய் இவற்றின் வேறுபட வருவனவெல்லாம் இதனான் அமைக்க. “பிணிநிறந் தீர்ந்து பெரும்பணைத்தோள் வீங்க அணிமலை நாடன் வருவான்கொல் தோழி கணிநிற வேங்கை கமழ்ந்துவண் டார்க்கும் மணிநிற மாலைப் பொழுது.”
(திணை.ஐம்.9) இது தலைவி இரவுக்குறி நயந்து கூறியது. “பெயல்கான் மறைத்தலின் விசும்புகா ணலரே நீர்பரந் தொழுகலின் நிலங்கா ணலரே யெல்லை சேறலின் இருள்பெரிது பட்டன்று பல்லோர் துஞ்சும் பானாட் கங்குல் யாங்குவந் தனையோ ஓங்கல் வெற்ப வேங்கை கமழுமெஞ் சிறுகுடி யாங்கறிந் தனையோ நோகோ யானே.”
(குறுந்.355) இஃது இரவுக்குறி வந்த தலைவனை நோக்கிக் கூறியது. “கொடுங்குரல் குறைத்த செவ்வாய்ப் பைங்கிளி அஞ்சல் ஓம்பி ஆர்பதங் கொண்டு நின்குறை முடித்த பின்றை என்குறை சொல்லல் வேண்டுமாற் கைதொழு திரப்பல் பல்கோட் பலவின் சாரல் அவர்நாட்டு நின்கிளை மருங்கிற் சேறி யாயின் அம்மலை கிழவோற் குரைமதி இம்மலைக்
|