கி ரெண்கின்”
என்னும் (112) அகப்பாட்டுங் காண்க. ‘கலக்கம்’ எனப் பொதுப்படக் கூறியவதனால் ஆற்றிடை ஏதமின்றிச் சென்றமை தோன்ற ஆண்டு ஒரு குறி செய் எனக் கூறுவனவுங் கொள்க. “கான மானதர் யானையும் வழங்கும் வான மீமிசை யுருமுநனி உரறும் அரவும் புலியும் அஞ்சுதக வுடைய இரவுச் சிறுநெறி தமியை வருதி வரையிழி யருவிப் பாடொடு பிரசம் முழவுச்சேர் நரம்பி னிம்மென விமிரும் பழவிற னனந்தலைப் பயமலை நாட மன்றல் வேண்டினும் பெறுகுவை யொன்றோ இன்றுதலை யாக வாரல் வரினே ஏமுறு துயர நாமிவ ணொழிய எற்கண்டு பெயருங் காலை யாழநின் கற்கெழு சிறுகுடி யெய்திய பின்றை ஊதல் வேண்டுமாற் சிறிதே வேட்டொடு வேய்பயி லழுவத்துப் பிரிந்தநின் நாய்பயிர் குறிநிலை கொண்ட கோடே.” (அகம்.318) என்னும் நித்திலக்கோவையுள், ‘வரினே ஏமுறு துயரம் நாமிவ ணொழிய, நின்னாய் பயிர் குறிநிலை கொண்ட கோட்டை ஊதல் வேண்டுமாற் சிறிது’ என்றவாறு காண்க. காப்பின்
கடுமை கையற வரினும் - காத்தற்றொழிலான் உண்டாங் கடுஞ்சொற்கள் களவொழுக்கத்திடத்தே எல்லையற வருமிடத்தும்: தோழிமேன கிளவி; அவை பலவகைய. உ-ம்: “கடலுட னாடியுங் கான லல்கியும் தொடலை யாயமொடு தழூஉ அணி யயர்ந்தும் நொதுமலர் போலக் கதுமென வந்து முயங்கினன் செலினே யலர்ந்தன்று மன்னே துத்திப் பாந்தட் பைத்தக லல்குல் திருந்திழை துயல்வுக்கோட் டசைத்த பசுங்கழைத் தழையினு முழையிற் போகான் தான்தந் தனன்யாய் காத்தோம் பல்லே.”
(குறுந்.294) இது, பகற்குறிக்கட் சிறைப்புறமாகச் செறிப்பறிவுறீஇயது. “கணமுகை கையெனக் காந்தள் கவின மணமுகை யென்றெண்ணி மந்திகொண் டாடும் விறன்மலை நாட வரவரிதாங் கொல்லோ புனமு மடங்கின காப்பு.”
(திணை.ஐம்.2) இது திணை விளைந்தமை கூறிச் செறிப்பறிவுறீஇயது. “அறையருவி யாடாள் தினைவனமுங் காவாள் பொறையுயர் தண்சிலம்பிற் பூந்தழையுங் கொய்யாள் உறைகவுள் வேழமொன் றுண்டென்றா ளன்னை மறையாதி வாழிய மையிருங் குன்றே.” இது குன்றத்திற்குக் கூறுவாளாகச் செறிப்பறிவுறீ இயது. “சாந்த மெறிந்து ழுத சாரற் சிறுதினைச் சாந்த விதண மிசைச்சார்ந்து
|