மென்றாட்குத் தோழி கூறியது. “பெருங்கடற் றிரையது சிறுவெண் காக்கை துறைபடி யம்பி யகமனை யீனுந் தண்ணந் துறைவ னல்கி னொண்ணுத லரிவை பாலா ரும்மே.”
(ஐங்குறு.168) இது, நொதுமலர்
வரைவுழி ஆற்றாது பசியட நின்றுழி இதற்குக் காரணமென்னென்ற செவிலிக்குத் தோழி கூறியது. “எந்தையும் யாயு முணரக் காட்டி யொளித்த செய்தி வெளிப்படக் கிளந்தபின் மலைகெழு வெற்பன் றலைவந் திரப்ப நன்றுபுரி கொள்கையி னொன்றா வின்றே முடங்க லிறைய தூங்கணங் குரீஇ நீடிரும் பெண்ணைத் தொடுத்த கூட்டினு மயங்கிய மைய லூரே.”
(குறுந்.374) இஃது அறத்தொடு நின்றமை தலைவிக்குக் கூறியது. வரைவு உடன்பட்டோற் கடாவல் வேண்டினும் - தலைவி தமர் வரைவுடன் படத்தானும் வரைவுடன் பட்ட தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்து நீட்டித்துழி இனி நீட்டிக்கற்பாலை யல்லையெனக் கடுஞ்சொற் கூறி வரைவுகடாவல் வேண்டிய இடத்தும். உ-ம்: “மாமலர் முண்டகந் தில்லையோ டொருங்குடன் கான லணிந்த வுயர்மண லெக்கர்மேற் சீர்மிகு சிறப்பினோன் மரமுதற் கைசேர்த்த நீர்மலி கரகம்போற் பழந்தூங்கு முடத்தாழைப் பூமலர்ந் தவைபோலப் புள்ளல்குந் துறைவகேள்; ஆற்றுத லென்பதொன் றலந்தவர்க் குதவுதல் போற்றுத லென்பது புணர்ந்தாரைப் பிரியாமை பண்பெனப் படுவது பாடறிந் தொழுகுதல் அன்பெனப் படுவது தன்கிளை செறாஅமை அறிவெனப் படுவது பேதையார் சொன்னோன்றல் செறிவெனப் படுவது கூறியது மறாஅமை நிறையெனப் படுவது மறைபிறர் அறியாமை முறைஎனப் படுவது கண்ணோடாது உயிர்வௌவல் பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்; ஆங்கதை யறிந்தனி ராயினென் றோழி நன்னுத னலனுண்டு துறத்தல் கொண்க தீம்பா லுண்பவர் கொள்கலம் வரைதல்
நின்தலை வருந்தியாள் துயரஞ் சென்றனை களைமோ பூண்கநின் றேரே.”
(கலி.133) இது முற்காலத்து வரைவுகடாவுமாறு போலன்றி வரைவு கடாயது. “யாரை யெலுவ யாரே நீயெமக் கியாரையு மல்லை நொதும லாளனை யனைத்தாற் கொண்கவெம் மிடையே நினைப்பிற் கடும்பகட் டியானை நெடுந்தேர்க் குட்டுவன் வேந்
|