தியிற் றோன்றிப் நாலூர்க்கோசர் நன்மொழி போல வாயா கின்றே தோழி ஆய்கழற் சேயிலை வெள்வேல் விடலையொடு தொகுவளை முன்கை மடந்தை நட்பே.”
(குறுந்.15) இஃது உடன்போயபின்
செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நின்றது. இன்னும்
அதனானே, “வல்லுரைக் கடுஞ்சொ லன்னை துஞ்சாள்.”
(அகம்.122) என்றலுஞ், “சிறுகிளி கடித றேற்றா ளிவள்”
(அகம்.28) என்றலுங், “கண்கோ ளாகநோக்கிப் பண்டு மினையையோ”
(நற்.55) என்றலும் போல்வன பிறவுங் கொள்க.
(24) நற்றாய்க்குரிய கூற்று உரைத்தல்
|