இஃது
எய்தியதன்மேற் சிறப்புவிதி. (இ-ள்)
கொடுப்போர் இன்றியும் கரணம்
உண்டே - முற்கூறிய கொடைக்குரிய மரபினோர் கொடுப்பக் கோடலின்றியுங் கரணம் உண்டாகும்; புணர்ந்து உடன் போகிய காலையான - புணர்ந்து உடன் போகிய காலத்திடத்து எ-று. இது
புணர்ந்து உடன்போயினார் ஆண்டுக் கொடுப்போ ரின்றியும் வேள்வி யாசான் காட்டிய சடங்கின் வழியாற் கற்புப் பூண்டு வருவதும் ஆமென்றவாறு.
இனி ஆண்டு வரையாது மீண்டுவந்து கொடுப்பக் கோடல் உளதேல் அது மேற்கூறிய தன்கண் அடங்கும். இனிப் போய வழிக் கற்புப் பூண்டலே கரணம் என்பாருமுளர். எனவே கற்பிற்குக் கரணம் ஒருதலையாயிற்று. “பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு தொன்மூ தாலத்துப்
பொதியிற்
|