ரூஉப்பணை யிமிழ வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்றுப் பூக்கணு மிமையார் நோக்குபு மறைய மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலை பழங்கன்று கறித்த பயம்பம லறுகைத் தழங்குரல் வானின் தலைப்பெயற் கீன்ற மண்ணு மணியன்ன மாயிதழ்ப் பாவைத் தண்ணறு முகையொடு வெண்ணூல்சூட்டித் தூவுடைப் பொலிந்து மேவரத் துவன்றி மழைப்பட்டன்ன மணன்மலி பந்தர் இழையணி சிறப்பிற் பெயர்வியர்ப் பாற்றித் தமர்நமக் கீத்த தலைநாள் இரவின் உவர்நீங்கு கற்பினெம் உயிருடம் படுவி முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇப் பெரும்புழுக் குற்றநின் பிறைநுதற் பொறிவியர் உறுவளி யாற்றச் சிறுவரை திறவென ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின் உறைகழி வாளின் உருவுபெயர்ந்த திமைப்ப மறைதிறன் அறியா ளாகி ஒய்யென நாணினள் இறைஞ்சி யோளே பேணிப் பரூஉப்பகை யாம்பற் குரூஉத்தொடை நீவிச் சுரும்பிமிர் ஆய்மலர் வேய்ந்த இரும்பல் கூந்தல் இருண்மறை யொளித்தே”
(அகம்.136) என வரும்.
(4) கற்பின்கண்
தலைவன் கூற்றுக்கள் நிகழுமிட மிவையெனல்
|