நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3572
Zoom In NormalZoom Out


வெழுத்தின் மான
வந்த குற்றம் வழிகெட வொழுகலும்
அழியல் அஞ்சலென் றாயிரு பொருளினுந்
தானவட் பிழைத்த பருவத் தானும்
நோன்மையும் பெருமையு மெய்கொள வருளிப்
பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தித்
தன்னின் ஆகிய தகுதிக் கண்ணும்
புதல்வற் பயந்த புனிறுசேர் பொழுதின்
நெய்யணி மயக்கம் புரிந்தோ ணோக்கி
ஐயர் பாங்கினு மமரர்ச் சுட்டியுஞ்
செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற் கண்ணும்
பயங்கெழு துணையணை புல்லிய புல்லாது
உயங்குவள் கிடந்த கிழத்தியைக் குறுகிப்
புல்கென முன்னிய நிறையழி பொழுதின்
மெல்லென் சீறடி புல்லிய விரவினும்
உறலருங் குண்மையி னூடல் மிகுத்தோளைப்
பிறபிற பெண்டிரிற் பெயர்த்தற் கண்ணும்
பிரிவி னெச்சத்துப் புலம்பிய இருவரைப்
பிரிவின் நீக்கிய பகுதிக் கண்ணும்
நின்றுநனி பிரிவின் அஞ்சிய பையுளுஞ்
சென்றுகை யிகந்து பெயர்த் துள்ளிய வழியுங்
காமத்தின் வலியுங் கைவிடி னச்சமும்
தானவள் பிழைத்த நிலையின் கண்ணும்
உடன்சேறல் செய்கையோடு அன்னவை பிறவும்
மடம்பட வந்த தோழிக் கண்ணும்
வேற்றுநாட் டகல்வயின் விழுமத் தானும்
மீட்டுவர வாய்ந்த வகையின் கண்ணும்
அவ்வழி பெருகிய சிறப்பின் கண்ணும்
பேரிசை யூர்திப் பாகர் பாங்கினும்
காமக் கிழத்தி மனையோ ளென்றிவர்
ஏமுறு கிளவி சொல்லிய வெதிருஞ்
சென்ற தேஎத் துழப்புநனி விளக்கி
இன்றிச் சென்ற தந்நிலை கிளப்பினும்
அருந்தொழின் முடித்த செம்மற் காலை
விருந்தொடு நல்லவை வேண்டற் கண்ணும்
மாலை யேந்திய பெண்டிரும் மக்களுங்
கேளி ரொழுக்கத்துப் புகற்சிக் கண்ணும்
ஏனை வாயி லெதிரொடு தொகைஇப்
பண்ணமை பகுதிமுப் பதினொரு மூன்றும்
எண்ணருஞ் சிறப்பிற் கிழவோன் மேன.
 

இது,   பார்ப்பார் முதலிய  பன்னிருவருங் (501 - 2)  கற்பிடத்துக்
கூற்றிற்கு  உரியராயினும்  அவருள் தலைவன் சிறந்தமையின்  அவன்
கூற்றெல்லாந் தொகுத்துக் களவிற் கூறியாங்கு முற் கூறுகின்றது.

(இ-ள்.) கரணத்தின்  அமைந்து  முடிந்த  காலை - ஆதிக்கரணமு