நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3576
Zoom In NormalZoom Out


களுடைய அமிர்தத்தை ஒக்கும் எமக்கெனப் புனைந்துரைத்து இதற்குக்
காரணங் கூறென்று அடிசிலும் பூவுந் தலைவி தொடுதலிடத்தும்: கூற்று
நிகழும்.

உவமை இழிவு சிறப்பு.

“வேம்பின் பைங்காயென் தோழி தரினே
தேம்பூங் கட்டி யென்றனிர்”
               (குறுந்.196)

எனத் தலைவன் கூற்றினைத் தோழிகொண்டு கூறியவாறு காண்க.

அந்தணர்     திறத்தும் சான்றோர் தேஎத்தும் அந்தமில் சிறப்பிற்
பிறர்பிறர்  திறத்தினும்  ஒழுக்கங்காட்டிய  குறிப்பினும்  - வேட்பித்த
ஆசிரியனுங்  கற்பித்த  ஆசிரியனுமாகிய  பார்ப்பார் கண்ணும், முற்ற
உணர்ந்து  ஐம்பொறியையும்  அடக்கியோர்  கண்ணும்,  முடிவில்லாச்
சிறப்பினையுடைய  தேவர்கள்   கண்ணும்  ஒழுகும்  ஒழுக்கத்தினைத்
தான் தொழுதுகாட்டிய குறிப்பின் கண்ணும்:

‘பிறர்பிற’ரென்றார்     தேவர்  மூவரென்பதுபற்றி. தன்னையன்றித்
தெய்வந்   தொழாதாளை  இத்தன்மையோரைத்    தொழல்  வேண்டு
மென்று  தொழுது  காட்டினான். குறிக்கொளுங் கூற்றான் உரைத்தலிற்
குறிப்பினு மென்றார். உதாரணம் வந்துழிக் காண்க.

ஒழுக்கத்துக்    களவினுள்நிகழ்ந்த அருமையைப் புலம்பி அலமரல்
உள்ளமோடு அளவிய இடத்தும் - வணக்கஞ்செய்தும் எதிர்மொழியாது
வினாயவழிப்  பிறராற் கூற்று நிகழ்ச்சியும் எதிர்ப்பட்டுழி எழுந்தொடுக்
கியுந்தான்  அக்காலத்து  ஒழுகும்  ஒழுக்கத்திடத்து முன்னர்க் களவுக்
காலத்து  நிகழ்ந்த கூட்டத் தருமையைத் தனித்துச்  சுழலுதலையுடைய
உள்ளத்தோடே உசாவிய இடத்தும் தலைவற்குக் கூற்று நிகழும்.

உதாரணம் வந்துழிக் காண்க. “கவவுக் கடுங்குரையள்” (குறுந்.132)
என்பது காட்டுவாரும் உளர்.

அந்தரத்து     எழுதிய எழுத்தின்  மான  வந்த குற்றம் வழிகெட
ஒழுகலும் (வந்த குற்றம் அந்தரத்து எழுதிய எழுத்தின் மான வழிகெட
ஒழுகுதலும்)  -  களவுக்காலத்து உண்டாகிய பாவம் ஆகாயத்தெழுதிய
எழுந்து  வழிகெடுமாறு  போல  வழிகெடும்படி பிராயச்சித்தஞ் செய்து
ஒழுகுதற்கண்ணும்:

அது முன்புபோலக் குற்ற