நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3581
Zoom In NormalZoom Out


காமற்கு
வேனில் விருந்தெதிர் கொண்டு.”
             (கலி.92)

எனவே, புல்லாதிருந்தாளென்றதனான் ஊடன்மிகுதி தோன்றுவித்து
மகளிரும்  மைந்தரும்  வேனில்  விழாச்  செய்கின்றார்  நாமும் அது
செய்யவேண்டுமென்று கூறியவாறு காண்க.

பிரிவின்  எச்சத்துப் புலம்பிய இருவரைப் பிரிவின் நீக்கிய பகுதிக்
கண்ணும்   -  பரத்தையிற்  பிரிவினது  தவிர்ச்சிக்கண்ணே  தனிமை
யுற்றிருந்த  தலைமகனையுந் தலைமகளையுந் தனதருளினானே தானும்
பிரிவி   னெச்சத்துப்   புலம்பி  நின்றான்  ஒருவன்  தலைவிதனைக்
கண்டருளுதற்கு அப்பிரிவினின்று நீக்கிய கூறுபாட்டின் கண்ணும்:

பிரிந்து வந்துழியல்லது புலத்தல் பிறவாமையின் ‘எச்சத்து’ என்றார்.
உதாரணம் வந்துழிக் காண்க. இதுவும் ஊடற்பகுதியாம்.

நின்று    நனி பிரிவின் அஞ்சிய பையுளும் - முன்னில்லா தொரு
சிறைப்  போய்  நின்று  நீட்டித்துப்  பிரிவினான் தலைவன் அஞ்சிய
நோயின்கண்ணும்: இது துனி.

“மையற் விளங்கிய” என்னும் மருதக்கலியுள்,

“ஏதப்பா டெண்ணிப் புரிசை வியலுள்ளோர்
கள்வரைக் காணாது கண்டேமென் பார்போலச்
சேய்நின்று செய்யாத சொல்லிச் சினவனின்
ஆணை கடக்கிற்பார் யார்.” 
                (கலி.81)

எனச்      சேய்நின்றென்றதனான்      துனித்து      நின்றவாறுஞ்,
சினவலென்றதனாற்  பிரிவு  நீட்டித்தவாறும், நின்னாணை கடக்கிற்பார்
யாரென அஞ்சியவாறுங் கூறியவாறு காண்க.

“பொய்யெல்லா மேற்றித் தவறு தலைப்பெய்து
கையொடு கண்டாய் பிழைத்தேன் அருளினி.”
   (கலி.95)

என்பதும் அச்சமாதலின் இதன்கண் அடங்கும்.

(சென்று     கை  இகந்து பெயர்த்து உள்ளிய வழியும்) சென்று -
தலைவன்  ஆற்றானாய்த்  துனியைத்   தீர்த்தற்கு  அவளை அணுகச்
சென்று;  கையிகந்து - அவன் மெய்க்கட் கிடந்த தவறுகண்டு தலைவி
ஆற்றாளாய்  நீக்கி  நிறுத்தலானே: பெயர்த்து - அவன் ஒருவாற்றான்
அவளாற்  றாமையைச்  சிறிது  மீட்கையினாலே;  உள்ளிய வழியும் -
அவள் கூடக்கருதிய விடத்தும்: தலைவன் கூற்று நிகழும்.

இதுவுந் துனிதீர்ப்பதொரு முறைமை கூறிற்று.

உ-ம்:

முற்கூறிய பாட்டுள்,

“அதிர்வில் படிறெருக்கி வந்தென் மக