துரந்து ஞாயிறு படினு மூர்சேய்த் தெனாது துனைபரி துரக்குந் துஞ்சாச் செலவின் எம்மினும் விரைந்துவல் எய்திப் பன்மாண் ஓங்கிய நல்லில் ஒருசிறை நிலைஇப் பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவிக் கன்றுபுகு மாலை நின்றோ ளெய்திக் கைகவியாச் சென்று கண்புதையாக் குறுகிப் பிடிக்கை யன்ன பின்னகந் தீண்டித் தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ நாணொடு மிடைந்த கற்பின் வாணுதல் அந்தீங் கிளவிக்குறுமகள் மென்றோள் பெறல்நசைஇச் சென்றவெ னெஞ்சே”
(அகம்.9) எனவரும். இன்னும் வேறுபட வருவனவெல்லாம் இதன்கண் அடக்குக. அவ்வழிப் பெருகிய
சிறப்பின்கண்ணும் - பிரிந்தவிடத்துத் தான் பெற்ற,
பெருக்கம் எய்திய சிறப்பின்கண்ணும் மனமகிழ்ந்து
கூறும். சிறப்பாவன
பகைவென்று திறை முதலியன கோடலும் பொருண் முடித்தலுந் துறைபோகிய ஓத்தும் பிறவுமாம். உ-ம்: “கேள்கே
டூன்றவுங் கிளைஞ ராரவும்” (அகம்.93) எனவும், “தாழிருள்
துமிய” (குறுந். 270) என்பதனுட் “செய்வினை முடித்த செம்மலுள்ளமொடு” எனவும்,
மனமகிழ்ந்து கூறியவாறு காண்க. “முன்னியது முடித்தனமாயின்”
என்னும் (169) நற்றிணையுட் பொதுப்படச்
சிறப்புக் கூறியவாறு காண்க. பேரிசை
ஊர்திப் பாகர் பாங்கினும் - அச்சிறப்புக்களை எய்திய தலைவன் பெரிய புகழையுடைத்தாகிய தேரையுடைய பாகரிடத்தும்: கூற்று நிகழ்த்தும். அவரது சிறப்பு
உணர்த்துதற்குப் பாகரெனப் பன்மையாற் கூறினார். “இருந்த வேந்தன் அருந்தொழில் முடித்தெனப் புரிந்த காதலொடு பெருந்தேர் யானும் ஏறிய தறிந்த தல்லது வந்த ஆறுநனி யறிந்தன்றோ விலனோ தாஅய் முயற்பறழ் உகளும் முல்லையம் புறவில் கவைக்கதிர் வரகின் சீறூர் ஆங்கண் மெல்லியல் அரிவை இல்வயின் நிறீஇ இழிமி னென்றநின் மொழிமருண் டிசினே வான்வழங் கியற்கை வளிபூட் டினையோ மானுரு வாகநின் மனம்பூட்சிடினையோ உரைமதி வாழியோ வலவ எனத்தன் வரைமருள் மார்பின் அளிப்பனன் மு
|