இது,
விருந்து முதலிய வாயில்கள் போலாது அகநகர்க்கட் புகுதற்குரிய வாயில்கள் கூற்று உணர்த்துகின்றது. (இ-ள்.)
கற்பும் -கணவன் முதலியோர் கற்பித்த நிலையில்
திரியாத நல்லொழுக்கமும்; காமமும் - அன்பும்; நற்பால்
ஒழுக்கமும் - எவ்வாற்றானுந் தங் குலத்திற்கு ஏற்றவாற்றான் ஒழுகும்
ஒழுக்கமும்; மெல் இயற்பொறையும் - வல்லென்ற
நெஞ்சொடு பொறுக்கும் அவனைப் போலாது ஒரு தலையாக
மெல்லென்ற நெஞ்சினராய்ப் பொறுக்கும் பொறையும்; நிறையும் - மறை
புலப்படாமை நிறுக்கும் நெஞ்சுடைமையும்; வல்லிதின் விருந்து புறந்தருதலும் - வறுமையுஞ் செல்வமுங் குறியாது வல்லவாற்றான் விருந்தினரைப் பாதுகாத்து அவர் மனமகிழ்வித்தலும்; சுற்றம் ஓம்பலும் - கொண்டோன் புரக்கும் நண்புடை மாந்தருஞ் சுற்றத்தாருங் குஞ்சர முதலிய காலேசங்களும் பலபடை மாக்களும் உள்ளிட்ட சுற்றங்களைப் பாதுகாத்து அவை உண்ட பின் உண்டலும்; அன்னபிறவும் கிழவோள் மாண்புகள் - அவை போல்வன பிறவுமாகிய தலைவியுடைய மாட்சிமைகளை; முகம்புகன் முறைமையிற் கிழவோற்கு உரைத்தல் - அவன் முகம்புகுதும் முறைமை காரணத்தான் தலைவற்குக் கூறுதல்; அகம்புகன் மரபின் வாயில்கட்கு உரிய -
அகநகர்க்கட் புகுந்து பழகி அறிதன் முறைமையினையுடைய
வாயில்களுக்குரிய, என்றவாறு. அன்னபிறவாவன,
அடிசிற்றொழிலுங், குடிநீர்மைக்
கேற்ற வகையான் தலைமகள்
ஒழிந்த தலைமகளிரையும்
மனமகிழ் வுறுத்தலுங், காமக்கிழத்தியர் நண்புசெய்து நன்கு
மதிக்கப்படுதலும் போல்வன. புகலுதல் - மகிழ்தல். செவிலி கூறாமை கொள்க, அவட்கு முகம்புகன்
முறைமையி
|