இது, மேல் அதிகாரப்பட்ட வாயில்
பரத்தையிற் பிரிவொடும் பட்டாதாகலின் அதுகூறி இனித் தலைவன் பரத்தைமை
நீங்குமிடங் கூறுகின்றது. (இ-ள்.)
பின்முறை ஆக்கிய பெரும்பொருள் வதுவை - மூவைகை வருணத்தாரும் முன்னர்த் தத்தம் வருணத்தெய்திய வதுவை
மனைவி யர்க்குப் பின்னர் முறையாற் செய்துகொள்ளப்பட்ட பெரிய பொருளாகிய வதுவை மனைவியரை; தொன்முறை மனைவி எதிர்ப்பாடாயினும் - பழைதாகிய முறைமையினையுடைய மனைவி விளக்கு முதலிய மங்கலங்களைக் கொண்டு எதிரேற்றுக்கோடற் சிறப்பினும்; இன் இழைப் புதல்வனை வாயில்கொண்டு புகினும் - இனிய பூண்களை யணிந்து தொன்முறை மனைவி
புதல்வனைக் கோலங்காட்டிய செல்வான் போலப் பின்முறை வதுவையரிடத்து வாயிலாகக் கொண்டு செல்லினும்; கிழவோன் இறந்தது நினைஇ - தலைவன் இங்ஙனம் செய்கையுடைய இருவகைத்
தலைவியரையுங் கைவிட்டுப் பரத்தைமை செய்து ஒழுகியவற்றை நினைந்து; ஆங்கட் கலங்கலும் உரியன் என்மனார் புலவர் - அப்பரத்தையர்கண் நிகழ்கின்ற காதல் நிலைகுலைந்து மீளுதலும் உரியன் எனக் கூறுவர் புலவர்
எ-று. உம்மை
எதிர்மறையாகலான் மீளாமையும் உரித்தாயிற்று;
என்னை; இளமைப்பருவங் கழியாத
காலத்து அக்காதன் மீளாதாகலின். பெரும்பொருளென்றார், வேதநூல் அந்தணர்க்குப் பின்முறை வதுவை மூன்றும்
அரசர்க்கிரண்டும்
வணிகர்க்கொன்றும்
நிகழ்தல் வேண்டுமெனக் கூறிற்றென்பது
உணர்த்துதற்கு. இனி,
மகப்பேறு காரணத்தாற் செய்யும் வது
|