வையென்றுமாம்.
‘ஆக்கிய’ வென்றதனானே வேளாளர்க்கும்பின்முறை வதுவை கொள்க.
தொன்மனைவி யென்னாது ‘முறை’ யென்றதனானே அவரும் பெருஞ்
சிறப்புச்செய்து ஒரு கோத்திரத்தராய்
ஒன்றுபட்டொழுகுவரென்பது கூறினார்.
இங்ஙனந் தொன்முறையார் பின்முறையாரை
மகிழ்ச்சி செய்தமை கண்டு இத்தன்மையாரை
இறந்தொழுகித் தவறுசெய்தேமே
யென்றும் பின்முறையார் அவர்
புதல்வரைக் கண்டு மகிழ்ச்சி செய்து வாயில் நேர்ந்த
குணம்பற்றி இவரை இறந்தொழுகித் தவறுசெய்தேமேயென்றும் பரத்தைமை
நீங்குவனென்றார். ‘புகினு’ மெனவே
பிறர் மனைப் புதல்வரென்பது பெற்றாம்.
தொன்முறை மனைவி எதிர்ப்பட்டதற்கு இலக்கியம்
வந்துழிக் காண்க. இனிப்,
பரத்தைமையிற் பிரிவொழிந்து மனைக்கண்
இருந்ததற்கு, உ-ம்: “மாத
ருண்கண் மகன்விளை யாடக் காதலிற் றழீஇ
யினிதிருந் தனனே தாதார் பிரச முரலும் போதார் புறவின்
நாடுகிழ வோனே.” (ஐங்குறு.406) இன்னும்
இவ்வாறு வருவன பிறவும் உய்த்துணர்ந்து கொள்க.
(31) தலைவி புலவி
நீங்குங்கால முணர்த்தல்
|