இரவும் பகலும் போர்ந்தொழின் மாறாமை தோன்ற அரும் பாசறை யென்றார். “நள்ளென்
யாமத்தும் பள்ளி கொள்ளான் சிலரொடு திரிதரும்
வேந்தன் பலரொடு முரணிய பாசறைத் தொழிலே.”
(பத்து.நெடுநல்.186,188) எனவும், “ஒருகை பள்ளி யொற்றி யொருகை
முடியொடு கடகஞ் சேர்த்தி நெடிதுநினைந்து”
(பத்து.முல்லை.75,76) எனவும் வருவனவற்றான்
அரிதாக உஞற்றியவாறு காண்க. இனிக்
காவற்பிரிவுக்கு முறைசெய்து காப்பாற்றுதலை எண்ணுமெனப் பொருளுரைக்க. (34) அகப்புறத்
தலைவற்குரிய விதி கூறல்
|