ப்
புகழ்ந்து கூறுங்கூற்று; வினைவயின் உரிய
என்ப - காரியங்களை நிகழ்த்துங் காரணத்திடத்து
உரியவென்று கூறுவார் ஆசிரியர் எ-று. அக்காரணமாவன,
கல்வியுங், கொடையும், பொருள் செயலும், முற்றகப்பட்டோனை
முற்றுவிடுத்தலுமாகிய
காரியகளை நிகழ்த்துவலெனக்
கூறுவன. இவ் வாள்வினைச்
சிறப்பை யான் எய்துவலெனத் தன்னைப் புகழவே
அதுபற்றித் தலைவி பிரிவாற்றுதல் பயனாயிற்று. “இல்லென
இரந்தோர்க்கொன் றீயாமை யிளிவென” (கலி.2) என்றவழி யான் இளிவரவு
எய்தேனென்றலிற் புகழுக்குரியேன் யானெக்
கூறியவாறு காண்க. ஏனையவும் வந்துழிக் காண்க.
(40) பாங்கற்கு
எய்திய தொருமருங்கு மறுத்தல்
|