சிறையழி புதுப்புனல்
ஆடுகம்
எம்மொடுங் கொண்மோவெந் தோள்புரை புணையே.”
(ஐங்குறு.78) இது,
காமக்கிழத்திநின்
மனைவியோடன்றி யெம்மொடு புணைகொள்ளின்
யாமாடுதுமென்று புனலாட்டிற்கு இயைந்தாள் போல மறுத்தது. “வயன்மல
ராம்பற் கயிலமை நுடங்குதழைத் திதலை யல்குற்
றுயல்வருங் கூந்தல் குவளை யுண்கணேஎர் மெல்லியன் மலரார்
மலிர்நிறை வந்தெனப் புனலாடு புணர்துறை யாயினள்
எமக்கே.” (ஐங்குறு.72) இது,
தலைவி புலவிநீங்கித் தன்னொடு
புனலாடல் வேண்டிய தலைவன், முன் புனலாடியதனை
அவள் கேட்பத் தோழிக் குரைத்தது. “வண்ண
வொண்டழை” (ஐங்குறு.73) “விசும்பிழி
தோகை” (ஐங்குறு.74) இவையும்
அது, “புனவளர் பூங்கொடி” என்னும் மருதக்கலியுள். (92) “அன்ன
வகையால்யான் கண்ட கனவுதான் நன்வாயாக் காண்டை
நறுநுதால் பன்மாணுங் கூடிப் புணர்ந்தீர் பிரியன்மின்
நீடிப் பிரிந்தீர் புணர்தம்மின் என்பன போல அரும்பவிழ்
பூஞ்சினை தோறும் இருங்குயில் ஆனா தகவும்
பொழுதினான் மேவர நான்மாடக் கூடன் மகளிரும்
மைந்தருந் தேனிமிர் காவிற் புணர்ந்திருந்
தாடுமார் ஆனா விருப்போ டணியயர்ப காமற்கு வேனில்
விருந்தெதிர் கொண்டு”
(கலி.92) என்னுஞ்
சுரிதகத்துக் காவிற் புணர்ந்திருந்தாட
நீயுங் கருதெனத் தலைவன் தலைவிக்குக்
கூறியவாறு காண்க. (50) தலைவனும்
தலைவியும் இல்லற நிகழ்த்தியபின் துறவறமும்
நிகழ்த்துவர் எனல்
|