தலைவற்கு இன்றி யமையாக்
கூத்தரும் ; விறலியார் - தாமே ஆடலும் பாடலும் நிகழ்த்தும் விறலியரும் ; அறிவர் -
முன்னே துறவுள்ளத்தராகிய அறிவரும் ; கண்டோர் - அவர் துறவு கண்டு கருணைசெய்யுங் கண்டோரும் ; யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப - இந்தத் தலைவனுந் தலைவியும் பெற்ற துறவின்கண்ணே
மனம் பிணிப்புண்ட சிறப்பினையுடைய வாயில்களென்று கூறுவர் ஆசிரியர் எ-று. என்றது, இவர் அத்துறவிற்கு இடையூறாகாது முன்செல்வர், தாமும் அவரைப் பிரிவாற்றாமையி னென்பதாம். இதனைக் கற்புங் காமமும் (தொல்.கற்.11) என்னுஞ் சூத்திரத்து முன்னாக வாயில்களைத் தொகுத்துக் கூறிய சூத்திரமாக வைத்தல் பொருத்த முடைத்தேனும் யாத்த சிறப்பினென்று துறவு நோக்குதலின் இதன்பின் வைத்தார். இதற்குக் கோப்பெருஞ்சோழன் துறந்துழிப் பிசிராந்தையாரும் பொத்தியாரும் போல்வார் துறந்தாரென்று கூறும் புறச்செய்யுட்கள் உதாரணம் எ-று.
(52) வினைவயிற்பிரிந்துமீளுந் தலைவற்குரியதோ ரிலக்கணமுணர்த்தல் |