இது,
மேற்கூறிய நிலைமைகள் கனவின்கண்ணும் நிகழு மெனப் பகுதிக்கிளவி கூறுகின்றது. (இ-ள்.)
அவ்விடத்தான - முன்னர் வழுவமைத்த நிலைமையின் கண்ணே வந்தன ; கனவும் உரித்தால் - கனவும் உரித்தாயிருந்தது முந்து நூற்கண் எ-று. எனவே, யானுங் கூறுவலென்றார். “அலந்தாங் கமையலேன் என்றானைப் பற்றியென் நலந்தாரா யோவெனத் தொடுப்பேன் போலவும் கலந்தாங் கேயென் கவின்பெற முயங்கிப் புலம்பல் ஓம்பென அளிப்பான் போலவும் ; முலையிடைத் துயிலும் மறந்தீத் தோயென நிலையழி நெஞ்சத்தேன் அழுவேன் போலவும் வலையுறு மயிலின் வருந்தினை பெரிதெனத் தலையுற முன்னடிப் பணிவான் போலவும்.”
(அகம்.128) இவற்றுள்,
தன்னெஞ்சினை உறுப்பும் உணர்வும் மறுத்துரைத்தலு முடையதாகக் கூறியவாறும், ஆங்கு எதிர்பெய்துகொண்ட தலைவன் உருவும் உறுப்பும் உணர்வும் மறுத்துரைத்தலு முடையதாகச் செய்யா மரபின செய்ததாகக் கூறியவாறும், அவை உயர்திணையாகக் கூறியவாறும், பிறவுமுணர்க. “இன்னகை யினைய மாகவு மென்வயின் ஊடல் யாங்குவந் தன்றென யாழநின் கோடந்து புருவமொடு குவவுநுதல் நீவி நறுங்கதுப் புளரிய நன்ன ரமையத்து வறுங்கை காட்டிய வாயல் கனவின்”
(அகம்.39) என வருவனவுங் கொள்க.
(3) கனவு களவின்கட் செவிலிக்கு முரித்தெனல்
|