இதுவும்
தோழிக்குந்
தலைவிக்கும் உரியனவாகிய வழுவமைக்கின்றது. (இ-ள்.)
பொழுதும் ஆறும் காப்பும்என்றிவற்றின் வழுவின் ஆகிய குற்றங் காட்டலும் - இராப்பொழுதும் அக்காலத்துவழியுங் கண்ணுறும் இடத்துள்ள காவலுமென்று கூறப்பட்டவை
மூன்றனது பழையமுறையிற் பிறழுதலாற் தலைவன்குளதாகிய குற்றத்தை யுணர்த்தலும்: இவை
தலைவற்கு அச்சம் உளவாகக் கருதுதலும் அவனால் நிகழும் இன்பத்தைத்
துன்பமாகக் கருதுதலும் உடையனவாயிற் றேனும் அன்புபற்றிக் கூறலின் அமைந்தது. அப்பொழுதிற்றலைவனது செலவுவரவு நிகழ்ந்துழியே இக்குற்றங் காட்டுவதென்று கொள்க. “மன்றுபா டவிந்து,,,,,,,,,”
(அகம்.128) என்பது பொழுது வழுவுதலிற் குற்றங்காட்டியது. “ஈர்ந்த ணாடையை எல்லி மாலையை சோர்ந்துவீழ் கதுப்பினாள் செய்குறி நீவரின் ஒளிதிகழ் ஞெகிழியர் கவணையர் வில்லர் களிறென ஆர்ப்பவர் ஏனல்கா வலரே.”
(கலி.52) இது. காப்பினான் வழுவுணர்த்தியது. தன்னை
அழிதலும் - அவன் அக்காலத்து அவ்வழியில் தனியே வருதற்கு யான் ஏதுவாயினேன் எனத் த
|