இது, தோழிக்குந் தலைவிக்கு முரியதொரு வழுவமைக்கின்றது. (இ-ள்.)
தலைவன் பிரியக் கருதியவழித் தோழியுந் தலைவியும் நீ போகின்றவிடம் எவ்வாற்றானும் போதற்கரிய நிலமெனக்
கூறி விலக்குதலும் நீக்குநிலைமையின்று எ-று. உ-ம்: “இடுமுள் நெடுவேலி போலக் கொலைவர் கொடுமரந் தேய்த்தார் பதுக்கை நிரைத்த கடுநவை ஆராற் றறுசுனை முற்றி உடங்குநீர் வேட்ட உடம்புயங் கியானை கடுந்தாம் பதிபாங்குக் கைதெறப் பட்டு வெறிநிரை வேறாகச் சாரச் சாரலோடி நெறிமயக் குற்ற நிரம்பாநீ டத்தஞ் சிறுநனி நீதுஞ்சி யேற்பினும் அஞ்சும் நறுநுதல் நீத்துப் பொருள்வயிற் செல்வோய் உரனுடை யுள்ளத்தை”
(கலி.12) எனச் சுரமெனக் கூறினாள். தலைவியுந்
தோழியாற் கூற்றுநிகழ்த்தும். சூத்திரம் பொதுப்படக் கிடத்தலின் தலைவி உடன்போகக் கருதியவழித் தலைவனுஞ் சுரமெனக் கூறுதல் கொள்க. “எல்வளை யெம்மொடு நீவரின் யாழநின் மெல்லியல் மேவந்த சீறடித் தாமரை அல்லிசேர் ஆயித ழரக்குத்தோய்ந் தவைபோலக் கல்லுறின் அவ்வடி கறுக்குந வல்லவோ”
(கலி.13) என வரும்.
(22) உலகவழக்கு செய்யுட்குமாமெனல்
|