இது, மேலதற்கொரு புறனடை. (இ-ள்.) இன்பம் என்பது தான் - அறனும் பொருளும் ஒழிய இன்பமென்று கூறப்படுவதுதான்; எல்லா உயிர்க்கும் அமர்ந்து வரூஉம் - மக்களுந் தேவரும் நரகரும் மாவும் புள்ளும் முதலிய எல்லாவுயிர்களுக்கும் மனத்தின்கண்ணே பொருந்தித் தொழிற்பட வருமாயினும்; மேவற்றாகும் - ஆணும்பெண்ணுமென அடுக்கிக் கூறலுடைத்தாய் நுகர்ச்சி நிகழும் எ-று. ‘மேவற்றாகு’
மென்றார்; என்பது ஆணும்பெண்ணுமாய்ப் போக நுகர்ந்து வருதலின். ஒருவனும் ஒருத்தியுமே இன்ப நுகர்ந்தா ரெனப் படாது அவ்வின்பம் எல்லாவுயிர்க்கும் பொதுவென்பதூஉம்
அவை இருபாலாய்ப் புணர்ச்சி நிகழ்த்துமென்பதூஉங் கூறியதாயிற்று. அறனும் பொருளும் எல்லா உயிர்க்கும் நிகழா, மக்கட்கே சிறந்து வருமென்றா ராயிற்று.
(29) ஊடல் தீர்க்கும் வாயில் நால்வர்க்குமுரித்தெனலும் பரத்தையிற்பிரிவு ஒரே நிலத்தின்கண்ணதெனலும்
|