கடாயினாற்கு விடையின்மை உணர்க. இதனானே நடுவுநிலைத்திணை யொழிந்த நான்கற்கும் பெயரும் முறையுங் கூறினான். இந்நான்கும்
உரிப்பொருளாதல் ‘புணர்தல் பிரிதல்’ (14) என்புழிக் கூறுதும். கருப்பொருளாகிய தெய்வத்தை முதற்பொருளொடு கூறியது, அவை ‘வந்த நிலத்தின்
பயத்த’ வாய் (19) மயங்குமாறு போல மயங்காது இது
வென்றற்கும், கருப்பொருளுடைத் தெனப்பட்ட பாலைக்குத் தெய்வத்தை விலக்குதற்கு மென்றுணர்க. உ-ம்: ‘‘வன்புலக் காட்டுநாட் டதுவே’’
(நற். 59) எனவும், ‘‘இறும்புபட் டிருளிய விட்டருஞ் சிலம்பிற்...
கன்மிசைச் சிறுநெறி’’
(அகம்.128) எனவும், ‘‘அவ்வய னண்ணிய வளங்கே ழூரன்’’
(அகம்.26) எனவும், ‘‘கானலுங் கழறாது மொழியாது’’
(அகம்.170) எனவும் நால்வகை யொழுக்கத்திற்கு நால்வகை நிலனும் உரியவாயினவாறு காண்க.
(5) முல்லைக்குங் குறிஞ்சிக்கும் உரி
பெரும்பொழுதும் சிறுபொழுதும் |