நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3751
Zoom In NormalZoom Out


தோ ளையை தந்தை
மழைவளந் தரூஉ மாவண் தித்தன்
பிண்ட நெல்லின் உறந்தை யாங்கண்
கழைநிலை பெறாஅக் காவிரி நீத்தங்
குழைமா ணொள்ளிழை நீவெய் யோளொடு
வேழ வெண்புணை தழீஇப் பூழியர்
கயநா டியானையின் முகனமர்ந் தாஅங்
கேந்தெழி லாகத்துப் பூந்தார் குழைய
நெருந லாடினை புனலே யின்றுவந்
தாக வனமுலை யரும்பிய சுணங்கின்
மாசில் கற்பிற் புதல்வன் தாயென
மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றியெம்
முதுமை யெள்ளலஃதமைகுந் தில்ல
சுடர்ப்பூந் தாமரை நீர்முதிர் பழனத்
தந்தூம்பு வள்ளை யாய்கொடி மயக்கி
வாளை மேய்ந்த வள்ளெயிற்று நீர்நாய்
முள்ளரைப் பிரம்பின் மூதரிற் செறியும்
பல்வேன் மத்தி கழாஅ ரன்னவெம்
இளமை சென்று தவத்தொல் லஃதே
இனிமையெவன் செய்வது பொய்ம்மொழி யெமக்கே.’’

                                       (அகம்.6)

பரத்தையொடு புனலாடி வந்தமைகேட்டுத் தலைவி புலந்தது.  இது
இளவேனில் வந்தது. ஏனைய வந்தவழிக் காண்க.

நாடகவழக்கானன்றி     உலகியல் வழக்கானும் அச் சிறு பொழுது
அப்பெரும்பொழுதிற்குப் பொருந்து மென்றற்குத் ‘தோன்று’ மென்றார்.
இதன்   பயன்  இவ்விரண்டு  நிலத்துக்கு  மற்றை  மூன்ற  காலமும்
பெரும்பான்மை வாராதென்றலாம்.                           (8)

பாலைக்குரிய காலம்
 

9. 

நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே.
 

இது   நிலனுடைய  நான்கற்குங்   காலங்   கூறி  அந்நான்கற்கும்
பொதுவாகிய பாலைக்குங் காலங் கூறுகின்றது.

(இ-ள்)   நடுவு  நிலைத்திணையே  -  பாலைத்திணை;  நண்பகல்
வேனிலொடு   -   எற்பாடுங்   காலையும்  என்னும்  இரு  கூற்றிற்கு
நடுவணதாகிய  ஒரு  கூறு  தான் கொண்டு வெம்மை செய்து பெருகிய
பெரும்பகலோடும்      இளவேனிலும்     முதுவேனிலும்    என்னும்
இரண்டனோடும்;   முடிவு  நிலை   மருங்கின்  -  பிரிவெனப்படுதற்கு
முடிவுடைத்தாகிய    குறிஞ்சியும்   முல்லையுமாகிய   ஒரு  மருங்கின்
கண்ணே