தோ ளையை தந்தை மழைவளந் தரூஉ மாவண் தித்தன் பிண்ட நெல்லின் உறந்தை யாங்கண் கழைநிலை பெறாஅக் காவிரி நீத்தங் குழைமா ணொள்ளிழை நீவெய் யோளொடு வேழ வெண்புணை தழீஇப் பூழியர் கயநா டியானையின் முகனமர்ந் தாஅங் கேந்தெழி லாகத்துப் பூந்தார் குழைய நெருந லாடினை புனலே யின்றுவந் தாக வனமுலை யரும்பிய சுணங்கின் மாசில் கற்பிற் புதல்வன் தாயென மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றியெம் முதுமை யெள்ளலஃதமைகுந் தில்ல சுடர்ப்பூந் தாமரை நீர்முதிர் பழனத்
தந்தூம்பு வள்ளை யாய்கொடி மயக்கி வாளை மேய்ந்த வள்ளெயிற்று நீர்நாய் முள்ளரைப் பிரம்பின் மூதரிற் செறியும் பல்வேன் மத்தி கழாஅ ரன்னவெம் இளமை சென்று தவத்தொல் லஃதே இனிமையெவன் செய்வது பொய்ம்மொழி யெமக்கே.’’
(அகம்.6) பரத்தையொடு
புனலாடி வந்தமைகேட்டுத் தலைவி புலந்தது. இது இளவேனில் வந்தது. ஏனைய வந்தவழிக் காண்க. நாடகவழக்கானன்றி உலகியல் வழக்கானும் அச் சிறு பொழுது அப்பெரும்பொழுதிற்குப் பொருந்து மென்றற்குத் ‘தோன்று’ மென்றார். இதன் பயன் இவ்விரண்டு நிலத்துக்கு மற்றை மூன்ற காலமும் பெரும்பான்மை வாராதென்றலாம்.
(8) பாலைக்குரிய காலம்
|