இதுமுன்
ஈரேழாமென்ற
துறை, இருவகைப்பட்டு இருபத்தெட்டாமென்கின்றது. (இ-ள்)
படை இயங்கு அரவம் - நிரைகோடற்கு
எழுந்த படை பாடிப்புறத்துப் பொருந்தும் அரவமும், நிரைமீட்டற்கு
எழுந்த படை விரைந்து செல்லும் அரவமும்; உ-ம்: ‘‘வெவ்வாண்
மறவர் மிலைச்சிய வெட்சியாற்
செவ்வானஞ் செல்வதுபோற் செல்கின்றா - ரெவ்வாயு
மார்க்குங் கழலொலி யாங்கட் படாலியரோ
போர்க்குந் துடியொடு புக்கு’’
(பெரும்பொருள்விளக்கம்.புறத்திரட்டு.1236.நிரைகோடல்.5) ‘‘அடியதி ரார்ப்பின
ராபெயர்த்தற் கன்னாய்
கடிய மறவர் கதழ்ந்தார் - மடிநிரை
மீளாது மீளார் விறல்வெய்யோர் யாதாங்கொல்
வாளார் துடியர் வளம்’’
(புறத்திரட்டு.1245) இவை
கண்டோர் கூற்று. பாக்கத்து
விரிச்சி - நிரைகோடற்கு எழுந்தோர்
போந்து விட்ட பாக்கத்துக் கங்குலின்
நல்வாய்ப்புட் கேட்டலும், நிரை
மீட்டற்கு எழுந்தோர் இடைப்புலத்துப்
புறம்போந்தோர் கூறியவற்றை வாய்ப்புள்ளாகக்
கேட்டலும்; உ-ம்: ‘‘திரைகவுள்
வெள்வாய்த் திரிந்துவீழ் தாடி
நரைமுதியோ னின்றுரைத்த நற்சொ - னிரையன்றி
யெல்லைநீர் வைய மிறையோர்க் களிக்குமால்
வல்லைநீர் சென்மின் வழி’’
(பெரும்பொருள்விளக்கம்.புறத்திரட்டு.1239) ‘‘வந்தநீர்
காண்மினென் றாபெயர்ப்போர் மாட்டிசைத்த
பைந்தொடியார் கூறும் பறவாப்பு - ளுய்ந்த ‘‘நிரையளவைத்
தன்றியு நீர்சூழ் கிடக்கை
வரைய
|