கூறினமையிற்
பூசன்மாற்றாயிற்று. நோய்
இன்று உய்த்தல் - நிரைகொண்டோர் அங்ஙனம்
நின்று நின்று சிலர் பூசன்மாற்றத் தாங்கொண்ட நிரையினை இன்புறுத்திக் கொண்டு போதலும்,
மீட்டோரும் அங்ஙனம் நின்று நின்று
சிலர் பூசன்மாற்றத் தாம் மீட்ட
நிரையினை இன்புறுத்திக்கொண்டு போதலும்; உ-ம்: ‘‘புன்மேய்ந்
தசைஇப் புணர்ந்துடன் செல்கென்னும்
வின்மே லசைஇயகை வெல்கழலான் - றன்மேற்
கடுவரை நீரிற் கடுத்துவரக் கண்டும்
நெடுவரை நீழ னிரை.’’
புற. வெ. வெட்சி.11) ‘‘கல்கெழுசீறூர்க்
கடைகாண் விருப்பினான்
மெல்ல நடவா விரையுநிரை - யொல்லெனத்
தெள்ளறற் கான்யாற்றுத் தீநீர் பருகவு
மள்ளர் நடவா வகை.’’
(பெரும்பொருள்விளக்கம்.
புறத்திரட்டு.1248.நிரைமீட்சி.6) இவை
கண்டோர் கூற்று. நுவலுழித்
தோற்றம் - பாடிவீட்டுள்ளோர்
மகிழ்ந்துரைத்தற்குக் காரணமான நிரைகொண்டோர்
வரவும், ஊரிலுள்ளோர் கண்டு மகிழந்துரைத்தற்குக்
காரணமான நிரைமீட்டோர் வரவும்; உ-ம்: ‘‘மொய்யண லானிரை
முன்செல்லப் பின்செல்லு
மையணற் காளை மகிழ்துடி - கையணல்
வைத்த வெயிற்றியர் வாட்க ணிடனாட
வுய்த்தன் றுவகை யொருங்கு.’’ (புறம். வெ.
வெட்சி.12) ‘‘காட்டகஞ்
சென்றுயிர் போற்றான் கடுஞ்சுரையா
மீட்ட மகனை வினவுறா - னோட்டந்து
தன்னெதிர் தோன்றும் புனிற்றாத் தழீஇக்கலுழு
மென்னெதிர்ப் பட்டாயோ வென்று.’’
(பெரும்பொருள்விளக்கம். புறத்திரட்டு.1249. நிரைமீட்சி.7) இது
கண்டோர் கூற்று. தந்து
நிரை - நிரைகொண்டோர் தாங்கொண்ட
நிரையைத் தம் மூர்ப்புறத்துத் தந்து
நிறுத்தலும், நிரைமீட்டோர்தாம்
மீட்ட நிரையினைத் தந்து நிறுத்தலும்; உ-ம்: ‘‘குளிறு
குரன்முரசங் கொட்டின் வெரூஉங்
களிறொடுதேர் காண்டலு மாற்றா - நளிமணி
நல்லா னினநிரை நம்மூர்ப் புறங்கான
மெல்லாம் பெறுக விடம்.’’ ‘‘கழுவொடு
பாகர் கலங்காமல் யாத்துத்
தொழுவிடை யாயந் தொகுமி - னெழுவொழித்தாற்
போமே யிவையிவற்றைப் போற்றுமின் புல்லொடுநீர்
தாமேய் புலம்போலத் தந்து.’’ இவை
கண்டோர் கூற்று. பாதீடு
- ஈத்தலும் ஈதலும் போலப் பாத்தலும் பாதலும்
ஒன்றாதலிற் பாதீடாயிற்று; வேந்தனேவலாற்
றாங்கொண்ட நிரையைப் பகுத்துக்கோடலும்,
மீட்டோருந் தத்தநிரையைப் பகுத்துக்கோடலும், நிரையை
இழந்தோர்க்குப் பகுத்துக் கொடுத்தலும்; உ-ம்:
|