இது மேல் தொகுத்துக் கூறிய எழுவகைத் திணையுள் அடங்காத
வற்றிற்கு முற்கூறிய துறைகளே போலத் தொடர் நிலைப்படுத்தாது மறத்திற்கு ஒன்பதும் அறத்திற்கு ஒன்பதுமாக இருவகைப்படுத்துத் துறை கூறுகின்றது.
(இ-ள்.) கூதிர் வேனில் என்று இரு பாசறைக் காதலின்ஒன்றிக் கண்ணிய மரபினும் - கூதிரெனவும் வேனிலெனவும் பெயர்பெற்ற இருவகைப் பாசறைக்கண்ணுங் காதலால் திரிவில்லாத மனத்தனாகி ஆண்டு நிகழ்த்தும் போர்த்தொழில் கருதிய மரபானும்;
கூதிர், வேனில் ஆகுபெயர். அக்காலங்களிற் சென்றிருக்கும் பாசறையாவது தண்மைக்கும் வெம்மைக்குந் தலைமைபெற்ற காலத்துப் போகத்திற் பற்றற்று வேற்றுப்புலத்துப் போந்திருத்தல். இக் காலங்களிற் பிரிதல் வன்மையின் இது வென்றியாயிற்று. தலைவி மேற் காதலின்றிப் போரின்மேற் காதலின் சேறலின் ‘ஒன்றி’யென்றார். இக்காலத்துச் சிறப்புப்பற்றி இரண்டையும் ஓதினாரேனும் ஓர்யாட்டை எல்லை இருப்பினும் அவற்றுவழித் தோன்றிய ஏனைக் காலங்களும் இரண்டாகி அவற்றுள் அடங்குமென்பது ஆசிரியர் கருத்தாயிற்று.
‘‘வினைவயிற் பெயர்க்குந் தானைப்
புனைதார் வேந்தன் பாசறை யேமே’’ (அகம்.84) எனத் தலைவியை |