இது
முற்கூறிய கடவுட்கும் மக்கட்கும்
எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. (இ-ள்)
காமப்பகுதி - முன்னர்ப் ‘புரைதீர் காம’ (தொல். புறம். 26) மென்றதனுட் பக்குநின்ற புணர்ச்சி வேட்கை; கடவுள் பாங்கினும் வரையார் - கட்புலனாகிய கடவுளிடத்தும் நீக்கார்; ஏனோர் பாங்கினும் வரையார் என்மனார் புலவர் - மக்களிடத்தும் நீக்காரென்று கூறுவர் புலவர் எ-று. பகுதி ஆகுபெயர். அது கடவுண்மாட்டுக் கடவுட்பெண்டிர் நயப்பனவும், அவர்மாட்டு மானிடப்பெண்டிர் நயப்பனவுங், கடவுண் மானிடப்பெண்டிரை நயப்பனவும் பிறவுமாம். இன்னும் ‘பகுதி’
யென்றதனானே எழுதிணைக்குரிய காமமுங் ‘காமஞ்சாலா இளமையோள்வயிற்’ (தொல். அகம். 50) காமமுமன்றி இது வேறொரு காமமென்று கொள்க. உ-ம்: ‘‘நல்கெனி னாமிசையா ணோமென்னுஞ் சேவடிமே லொல்கெனி னுச்சியா ணோமென்னு - மல்கிரு ளாட லமர்ந்தாற் கரிதா லுமையாளை யூடலுணர்த்துவதோ ராறு’’
(புற. வெ. பாடாண்.48) ‘‘பல்லேற்ற பரிகலத்துப் பலியேற்றன் மேலிட்டு வல்லேற்ற முலைமகளிர் மனமேற்ப வருதிரால் வல்லேற்ற முலைமகளிர் மனமேற்ப நீரேறுங் கொல்லேற்றுக் கறுகிடினுங் கொள்ளுமோ கொள்ளாதோ’’ ‘‘குடுமிப் பருவத்தே கோதை புனைந்தே யிடுமுத்தம் பூத
|